சுஷாந்த் வழக்கு- மகா. போலீசுடனான மோதலில் உச்சம்- கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்ட பீகார் ஐபிஎஸ் அதிகாரி
மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பான விசாரணைக்கு வந்த பீகார் ஐ.பி.எஸ். அதிகாரி வினய் திவாரியை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்தியதுடன் அவரது கையில் தனிமைப்படுத்தப்பட்டவர் என முத்திரை குத்தியது சர்ச்சையாகி உள்ளது.
டோணியின் வாழ்க்கை திரைப்படத்தில் நடித்து அசத்தியவர் சுஷாந்த் சிங். பீகாரை பூர்வீமாக கொண்ட சுஷாந்த் சிங் அண்மையில் மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுஷாந்த்சிங் மரணம்- சு.சுவாமி கருத்து
சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக மும்பை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்த் சிங் மரணம் கொலை என பாஜகவை சேர்ந்த ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகை மீது புதிய புகார்
இந்த நிலையில் சுஷாந்த்சிங்கின் தந்தை பீகார் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், மகனின் தற்கொலைக்கு மாஜி காதலியான நடிகை ரியாதான் காரணம் என கூறியிருந்தார். இதனையடுத்து பாட்னா போலீசார் நடிகை ரியா மீது வழக்கு பதிவு செய்தது.

கட்டாய தனிமைப்படுத்துதல்
இந்த நிலையில் பீகார் ஐ.பி.எஸ். அதிகாரியான வினய் திவாரி தலைமையிலான ஒரு குழு சுஷாந்த் வழக்கு விசாரணைக்காக மும்பை வந்தது. ஆனால் மும்பை மாநகராட்சி அதிகாரிகளோ, வினய் திவாரியை கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்தி உள்ளனர். அத்துடன் தனிமைப்படுப்படுத்தப்பட்ட நபர் என அவர் கையில் முத்திரையும் குத்தி இருக்கின்றனர்.

இரு மாநில பிரச்சனை
இந்த விவரங்களை பீகார் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே சுஷாந்த் வழக்கு விசாரணையில் தங்களுக்கு மகாராஷ்டிரா போலீசார் உரிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன் சுஷாந்த்சிங் தந்தை விரும்பினால் சிபிஐ விசாரணைக்கு நடவடிக்கை எடுப்போம் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மீது மத்திய அமைச்சர் புகார்
அதேபோல் சுஷாந்த்சிங் வழக்கில் மகாராஷ்டிரா அரசு எதுவுமே செய்யவில்லை. என்ன விசாரிக்கிறார்கள்? யாரிடம் விசாரிக்கிரார்கள்? என தெரியவில்லை. வெறும் பரபரப்பு செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன என்று மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் தற்போது பீகாரில் இருந்து விசாரணைக்கு வந்த ஐபிஎஸ் அதிகாரியை மும்பை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி தனிமைக்குள்ளாக்கி வைத்திருப்பது இருமாநிலங்களிடையேயான பிரச்சனையை விஸ்வரூபமாக்கி உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications