சுஷாந்த் வழக்கு- மகா. போலீசுடனான மோதலில் உச்சம்- கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்ட பீகார் ஐபிஎஸ் அதிகாரி
மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பான விசாரணைக்கு வந்த பீகார் ஐ.பி.எஸ். அதிகாரி வினய் திவாரியை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்தியதுடன் அவரது கையில் தனிமைப்படுத்தப்பட்டவர் என முத்திரை குத்தியது சர்ச்சையாகி உள்ளது.
டோணியின் வாழ்க்கை திரைப்படத்தில் நடித்து அசத்தியவர் சுஷாந்த் சிங். பீகாரை பூர்வீமாக கொண்ட சுஷாந்த் சிங் அண்மையில் மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுஷாந்த்சிங் மரணம்- சு.சுவாமி கருத்து
சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக மும்பை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்த் சிங் மரணம் கொலை என பாஜகவை சேர்ந்த ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகை மீது புதிய புகார்
இந்த நிலையில் சுஷாந்த்சிங்கின் தந்தை பீகார் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், மகனின் தற்கொலைக்கு மாஜி காதலியான நடிகை ரியாதான் காரணம் என கூறியிருந்தார். இதனையடுத்து பாட்னா போலீசார் நடிகை ரியா மீது வழக்கு பதிவு செய்தது.

கட்டாய தனிமைப்படுத்துதல்
இந்த நிலையில் பீகார் ஐ.பி.எஸ். அதிகாரியான வினய் திவாரி தலைமையிலான ஒரு குழு சுஷாந்த் வழக்கு விசாரணைக்காக மும்பை வந்தது. ஆனால் மும்பை மாநகராட்சி அதிகாரிகளோ, வினய் திவாரியை கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்தி உள்ளனர். அத்துடன் தனிமைப்படுப்படுத்தப்பட்ட நபர் என அவர் கையில் முத்திரையும் குத்தி இருக்கின்றனர்.

இரு மாநில பிரச்சனை
இந்த விவரங்களை பீகார் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே சுஷாந்த் வழக்கு விசாரணையில் தங்களுக்கு மகாராஷ்டிரா போலீசார் உரிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன் சுஷாந்த்சிங் தந்தை விரும்பினால் சிபிஐ விசாரணைக்கு நடவடிக்கை எடுப்போம் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மீது மத்திய அமைச்சர் புகார்
அதேபோல் சுஷாந்த்சிங் வழக்கில் மகாராஷ்டிரா அரசு எதுவுமே செய்யவில்லை. என்ன விசாரிக்கிறார்கள்? யாரிடம் விசாரிக்கிரார்கள்? என தெரியவில்லை. வெறும் பரபரப்பு செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன என்று மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் தற்போது பீகாரில் இருந்து விசாரணைக்கு வந்த ஐபிஎஸ் அதிகாரியை மும்பை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி தனிமைக்குள்ளாக்கி வைத்திருப்பது இருமாநிலங்களிடையேயான பிரச்சனையை விஸ்வரூபமாக்கி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications