மகாராஷ்டிராவில் வேற முகம் காட்டிய சிவசேனா..வெலவெலத்த அதிருப்தி கோஷ்டிக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் அதிருப்தி எம்.எல்.ஏக்களை சிவசேனா தொடர்ந்து மிரட்டி வருவதால் 15 பேருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது மத்திய பாஜக அரசு.
மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கி உள்ளனர். பாஜக ஆதரவுடன் கலகக் குரல் எழுப்பியுள்ள இந்த எம்.எல்.ஏக்கள் தற்போது அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் சொகுசு ஹோட்டலில் தங்கி உள்ளனர்.

கடந்த ஒருவார காலமாக அன்பாக, அமைதியாக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சிவசேனா தலைமை வேண்டுகோள் விடுத்தது. ஆனாலும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இறங்கி வரவில்லை. அடுத்தடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கைதான் அதிகரித்தது. சிவசேனா தலைமை பேச்சுவார்த்தை நடத்தியும் பயன் தரவில்லை.
இந்நிலையில் சிவசேனா தொண்டர்கள் இப்போது வீதியில் இறங்கிவிட்டனர். அதிருப்தி எம்.எல்.ஏக்களின் அலுவலகங்கள் தாக்கப்பட்டு வருகின்றன அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இனி மகாராஷ்டிரா மாநிலத்துக்குள் நுழையவோ நடமாடவோ முடியாத ஒருவித பதற்ற சூழ்நிலையை சிவசேனா உருவாக்கி கொண்டிருக்கிறது. அதற்கேற்ப, நீங்களும் எத்தனை நாள்தான் குவஹாத்தியில் பதுங்கி கிடப்பீங்க பார்ப்போம் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மிரட்டல் விடுத்துள்ளார். அதேபோல் சிவசேனா தொண்டர்களும், துரோகிகளே! உங்களை மன்னிக்க மாட்டோம்; பால்தாக்கரே குடும்பத்துக்கு துரோகம் செய்த உங்களுக்கு மன்னிப்பும் கிடையாது என கூறி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் குவஹாத்தியில் மேலும் சில நாட்களுக்கு தங்குவது என அதிருப்தி எம்.எல்.ஏக்கள் முடிவு செய்துள்ளனர். இதனிடையே சிவசேனாவின் மிரட்டலுக்குள்ளாகி இருக்கும் 15 அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு மத்திய பாஜக அரசு ஒய்பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது. மகாராஷ்டிராவில் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கும் எம்.எல்.ஏக்களின் வீடுகளுக்கும் பாதுகாப்பை அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளதாம் மத்திய அரசு.












Click it and Unblock the Notifications