இடஒதுக்கீடுக்கு எதிராக பேசிய ராஜ்தாக்கரே.. கொந்தளித்த ராம்தாஸ் அத்வாலே.. என்ன சொன்னார் பாருங்க
மும்பை: மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரேவுக்கு எதிராக பேசியதற்கு மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜ் தாக்கரே தனது கருத்தை வாபஸ் பெறாவிட்டால், தலித், பழங்குடியின மக்கள் அவரை புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிராவில் முன்னணி அரசியல் கட்சியாக நவநிர்மாண் சேனா உள்ளது. இதன் தலைவராக ராஜ் தாக்கரே உள்ளார். ஆக்ரோஷமான கருத்துகளை பேசுபவராக அறியப்படும் ராஜ்தாக்கரே, பண்டர்பூரில் அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேலை வாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதில் சாதி ஒரு காரணியாக இருக்க கூடாது.. தனியார் வேலைவாய்ப்புகளை கொடுத்து கொண்டு இருக்கும் போது, அரசு வேலையில் இடஒதுக்கீடு அடிப்படையில் எத்தனை பேர் பயன்பெற்றனர் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். ஓட்டுக்காக தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்பதை அனைத்து சமூக மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.
ராஜ் தாக்கரேவின் இந்த கருத்துக்கு இந்திய குடியரசுகட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அத்வாலே கூறுகையில், "இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்தை ராஜ்தாக்கரே திரும்ப பெற வேண்டும். ராஜ் தாக்கரே இதை செய்யாவிட்டால், வரும் சட்டமன்ற தேர்தலில் தலித், பழங்குடியின மற்றும் ஒபிசி பிரிவு மக்கள் ராஜ் தாக்கரே கட்சி வேட்பாளர்களை புறக்கணிக்க வேண்டும். இட ஒதுக்கீடு தொடர்பான அவரின் கருத்து தேவையற்றது" என்றார்.
ராம்தாஸ் அத்வாலே கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. மகாராஷ்டிராவில் உள்ள பல்வேறு பகுதிகளில் தலித் வாக்குகள் பாஜக கூட்டணிக்கு கிடைப்பதற்கு முக்கிய பங்காக ராம்தஸ் அத்வாலே இருக்கிறார். மத்திய இணை அமைச்சராக தற்போது ராம்தாஸ் அத்வாலே பதவி வகித்து வருகிறார். நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மகாரஷ்டிராவில் தற்போது பாஜக கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே ஆட்சி நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications