பீமா-கொரேகான் வழக்கு.. 6 மாதம் நிபந்தனை ஜாமீன்.. 81 வயதான வரவர ராவ் 2 வருடத்திற்கு பின் விடுதலை!
மும்பை: பீமா-கொரேகான் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலரும், கவிஞருமான வரவர ராவ் நேற்று இரவு பெயிலில் விடுதலை செய்யப்பட்டார்.
பீமா-கொரேகான் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட வரவர ராவ் கடந்த 2 வருடமாக சிறையில் இருந்தார். சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர் தலோஜா மத்திய சிறையில் இருந்தார். இவருக்கு 81 வயதான நிலையில் பல்வேறு உடல்நல குறைபாடுகள் ஏற்பட்டது.

இந்த குறைபாடுகளை காரணம் காட்டி பெயில் கேட்கப்பட்டது. ஆனால் இவருக்கு தொடர்ந்து பெயில் மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் மும்பை ஹைகோர்ட் இவருக்கு பெயில் வழங்கியது. இவரின் உடல்நிலை மோசமானதை அடுத்து மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று இரவு பெயிலில் விடுவிக்கப்பட்டார். 6 மாதம் நிபந்தனை ஜாமீன் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், இதே வழக்கில் கைதான மற்ற நபர்களை தொடர்பு கொள்ள கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிகிச்சை முடிந்து இவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதி, புனேவில் நடைபெற்ற கொரேகான்-பீமா போர் நினைவிடம் அருகே நடைபெற்ற வன்முறைக்கு வரவர ராவ் பேச்சுதான் காரணம் என்று புகார் உள்ளது. எல்கர் பரிஷத் மாநாட்டில் வன்முறையை தூண்டும் வகையில் வரவர ராவ் பேசியதாக புகார் உள்ளது.
அதோடு இவருக்கு மாவோயிஸ்டுகள் உடன் தொடர்பு உள்ளது என்றும் புகார் வைக்கப்பட்டது. இதே வழக்கின் வரவர ராவுடன் 9 சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடப்பட்டது.
-
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
Reliance: 6ஆவது ஆண்டாக ஊதியமில்லாமல் வேலை செய்யும் முகேஷ் அம்பானி! ஏன் என்னாச்சு? -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications