ஆட்சியில் இருப்பதால் ரொம்ப ஆடாதீங்க.. பாஜகவை உடைக்கவும் எமன் வருவான்! வெளுத்துவிட்ட மம்தா பானர்ஜி
மும்பை: ‛‛மகாராஷ்டிராவில் ஒழுக்கமற்ற முறையில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிக்கிறது. பாஜகவும் ஒருநாள் மத்தியில் ஆட்சியை விட்டு செல்ல வேண்டி வரும். அப்போது பாஜகவையும் யாராவது உடைக்கலாம்'' என மம்தா பானர்ஜி பரபரப்பாக பேசினார்.
மகாராஷ்டிரா முதல்வராக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே உள்ளார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி வைத்து ஆட்சி நடத்துவதில் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
மகா விகாஷ் அகாடி எனும் இந்த கூட்டணி ஆட்சி மீது சிவசேனா எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனை வெளிக்காட்டும் வகையில் அவர்கள் மகாராஷ்டிராவை விட்டு வெளியேறி உள்ளனர்.

மகாராஷ்டிரா அரசியல் நிலவரம்
அதாவது சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். சிவசேனா கட்சிக்கு மொத்தம் 55 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் ஏக்நாத் ஷிண்டேவுடன் சிவசேனாவின் 40 எம்எல்ஏக்களும், சுயேச்சைகள் 6 பேரும் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக வெறும் 12 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னணியில் பாஜக இருப்பதாக...
இந்த நடவடிக்கைக்கு பின்னால் பாஜக உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. 2019 சட்டசபை தேர்தலின்போது பாஜக-சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் பாஜக 105 இடங்களில் வென்ற நிலையில் சிவசேனா 55 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இருப்பினும் சிவசேனா பாஜகவின் கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. இதனால் எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட்டு வந்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக அமைதி காத்த பாஜக தற்போது ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

மகாராஷ்டிராவில் ஆட்சி கலைக்க முயற்சி
இந்நிலையில் தான் மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து பாஜகவை மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி மம்தா பானர்ஜி கூறியதாவது: மகாராஷ்டிராவில் ஒழுக்கமற்ற முறையில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிக்கிறது. மகாராஷ்டிரா எம்எல்ஏக்களை அஸாமுக்கு அனுப்பியதற்கு பதில் மேற்கு வங்கத்துக்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் நன்கு கவனித்து அனுப்புகிறோம்.

பாஜகவும் உடைபடும்
மகாராஷ்டிரா அரசியலில் உத்தவ் தாக்கரே உள்பட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். இன்று பாஜக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. இதனால் பணம், வலிமை, மாபியா பலத்தை பயன்படுத்துகிறது. ஆனால் பாஜகவும் ஒருநாள் ஆட்சியை விட்டு செல்ல வேண்டி வரும். பாஜகவையும் யாராவது உடைக்கலாம். இது தவறானது. இதற்கு ஒருபோதும் ஆதரவு அளிக்க மாட்டேன்'' என்றார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications