அடக் கொடுமையே.. ஓடுற பஸ்சில் குழந்தையையும் பெற்று ஜன்னல் வழியாக வீசிய கொடூர பெண்! புருஷன் உடந்தை
மகாராஷ்டிர மாநிலம், பார்பானி மாவட்டத்தில், ஜூலை 15, 2025 அன்று காலை 6:30 மணிக்கு ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. ஸ்லீப்பர் கோச் பேருந்தில் பயணம் செய்த 19 வயது பெண் ஒருவர், குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்தப் பெண்ணும், தன்னை கணவர் என்று சொல்லிக் கொண்ட ஒருவரும் குழந்தையை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்தனர். இதில் அந்தக் குழந்தை இறந்துவிட்டது.

நடந்தது என்ன?
புனேவிலிருந்து பார்பானிக்கு சென்ற சந்த் பிரயாக் டிராவல்ஸ் பேருந்தில் ரீத்திகா தேரே மற்றும் அல்தாப் ஷேக் என்ற இருவர் பயணம் செய்தனர். ஷேக், ரீத்திகாவின் கணவர் என்று சொல்லிக் கொண்டார். பேருந்தில் போகும் வழியில், ரீத்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த தம்பதியினர் குழந்தையை துணியில் சுற்றி வெளியே வீசிவிட்டார்களாம்.
பேருந்தில் பயணித்த ஒருவர், ஜன்னல் வழியாக தூக்கி எறியப்பட்ட ஒன்றைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அது என்னவென்று விசாரித்தபோது, அது ஒரு குழந்தை என்பதை அறிந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து பேருந்தை நிறுத்தி விசாரணையைத் தொடங்கினர். அந்தப் பெண்ணையும், ஷேக்கையும் கைது செய்தனர்.
குழந்தையை வீசியதாக வாக்குமூலம்
குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தேரே மற்றும் ஷேக், பார்பானி பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக புனேவில் தங்கியிருந்துள்ளனர். அவர்கள் கணவன், மனைவி என்பதற்கான எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை என்று அதிகாரி கூறினார். "குழந்தையை வளர்க்க முடியாது என்ற காரணத்தால் தூக்கி எறிந்ததாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். சாலையில் வீசியதால் குழந்தை இறந்துவிட்டது," என்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.
ஸ்லீப்பர் பேருந்தின் டிரைவரும், ஜன்னலுக்கு வெளியே ஏதோ வீசப்பட்டதைக் கவனித்திருக்கிறார். அவர் விசாரித்தபோது, ஷேக், "என் மனைவிக்கு பேருந்தில் பயணம் செய்ததால் குமட்டல் ஏற்பட்டது, அதனால் வாந்தி எடுத்தாள்" என்று கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பர்பானி மாவட்டத்தில் உள்ள பாத்ரி காவல் நிலையத்தில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 318-வது பிரிவின் கீழ் (பிறப்பை மறைத்தல்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்று அதிகாரி தெரிவித்தார்.
"சாலையில் இருந்த ஒருவர் பேருந்து ஜன்னலில் இருந்து வீசப்பட்டது என்னவென்று பார்த்தபோது, அது ஒரு குழந்தை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனே 112 என்ற போலீஸ் உதவி எண்ணுக்கு தகவல் கொடுத்தார்," என்று அந்த அதிகாரி விளக்கினார்.
ரோந்து பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று பேருந்தை நிறுத்தி, முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர். பின்னர், அந்தப் பெண்ணையும், ஷேக்கையும் கைது செய்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications