ஆன்லைன் டேட்டிங் ஆப்பில் அறிமுகமான இளைஞர்! நெருங்கி பழகிய பெண் மருத்துவரின் நிலை என்ன?
மும்பை: டேட்டிங் செயலியில் அறிமுகமான இளைஞருடன் பழகியதால் பெண் டாக்டர் கர்ப்பம் தரித்தாராம். பின்னர் அந்த இளைஞர் தன்னை கட்டாய கருக்கலைப்பு செய்து ஏமாற்றியதாக போலீஸில் அந்த மருத்துவர் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்.
மும்பையைச் சேர்ந்த 28 வயது இளம்பெண், இவர் அந்தேரியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு அவருக்கு ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் டோங்கிரியில் வசிக்கும் 27 வயது இளைஞர் அறிமுகமானாராம்.

இருவரும் தங்களது செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு மணிக்கணக்கில் பேசி வந்தனர். இருவரும் தினமும் பேசி வந்ததால் அந்த இளைஞரை அந்த பெண் நம்பினார். அவரை பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் வந்தது. இதனால் அவரை அந்த பெண் மருத்துவர் தனிமையில் சந்தித்தார்.
அப்போது இருவரும் காதலை வெளிப்படுத்திக் கொண்டனர். இதையடுத்து அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். அப்போது அந்த இளைஞர், அந்த பெண் மருத்துவருடன் தனிமையில் இருப்பதை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டாராம்.
இப்படியே அவ்வப்போது இருவரும் தனிமையில் சந்தித்ததால் அந்த பெண் மருத்துவர் கர்ப்பம் ஆனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த இளைஞரிடம் போய் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டாராம்.
ஆனால் அந்த இளைஞர் அதற்கு மறுத்தாராம். மேலும் அந்த குழந்தையை கலைத்துவிடுமாறு அந்த இளைஞர் தெரிவித்ததற்கு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மருத்துவர், முடியாது என மறுத்தாராம். இதனால் கோபமடைந்த அவர், தன்னிடம் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பரப்பிவிடுவேன் என மிரட்டினாராம்.
இதனால் அச்சமடைந்த அந்த பெண் மருத்துவர், கடந்த பிப்ரவரி மாதம் கருக்கலைப்பு செய்து கொண்டார். பின்னர் இளைஞர் , பெண் மருத்துவருடன் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்திக் கொண்டாராம். இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் டாக்டர், இளைஞர் குறித்து விசாரித்தாராம்.
அப்போது அந்த இளைஞருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது தெரியவந்தது. இதனால் அவர் தன்னுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீஸார் , அந்த இளைஞர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications