வீட்டில் இருந்து வேலை...வாய்ப்பு தேடுவது 442% அதிகரிப்பு... ஆய்வில் தகவல்!!
மும்பை: வீட்டில் இருந்து வேலை செய்ய அல்லது தொலை தூரத்தில் இருந்து வேலை செய்ய தேடுதலில் ஈடுபட்டுள்ளவர்களின் சதவீதம் 44 ஆக கடந்த பிப்ரவரி முதல் ஜூலை வரை அதிகரித்து இருப்பாதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கிடைத்த வேலைக்கு செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வீட்டில் இருந்து ஐடி போன்ற நிறுவனத்தினர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பலரும் வீட்டில் இருந்தவாறு வேலை செய்ய வாய்ப்புகளை தேடி வருகின்றனர். கொரோனா காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்வது தற்காலிகமானதாக இருக்கும்.

ஆனால், வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு மவுசு அதிகரித்து வருகிறது. மேலும், ஐடி, தொழில்நுட்பத்துறைகள், சுகாதாரம், மார்க்கெட்டிங், டெலிவரி ஆகிய துறைகளில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்வதால், உற்பத்தி திறன் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்பதை நிறுவனங்கள் உறுதி செய்த பின்னர், வீட்டில் இருந்து வேலை செய்வதையும் அங்கீகரித்து வருகின்றன. வேலை வாய்ப்பையும் வழங்கி வருகின்றன.
வேலை தேடுபவர்களுக்கு வீட்டில் இருந்து செய்வது சவுகரியமாக இருக்கிறது என்று நம்புகின்றனர். இதனால், தற்போது பலரும் வீட்டில் இருந்து வேலை செய்வதை தேர்வு செய்து வருகின்றனர். கொரோனா போன்ற இக்கட்டான கால கட்டங்களில் தொலைதூரத்தில் இருந்து பணியாற்றினாலும், தொடர்ந்து வர்த்தகம் எந்த இடையூறும் இன்றி நடந்து வருகிறது. தொலைதூரத்தில் இருந்து திறன் இருந்தும் இதுநாள் வரை வாய்ப்புகள் பெற முடியாமல் இருந்தவர்களுக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு இதுபோன்ற வேலைகள் சாதமாக இருப்பதாகவே கருத்துக்கள் எழுந்துள்ளன.
-
மிகப்பெரிய பிரச்சனையில் இந்தியா.. ஈரான் விஷயத்தை விடுங்க! இதை கவனிக்காம விட்டா ரொம்ப டேஞ்சர் -
மத்திய ஆயுத காவல் படையில் வேலை.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்.. 69 ஆயிரம் வரை சம்பளம்.. செம சான்ஸ்! -
MBBS Job: மத்திய அரசில் மருத்துவ அதிகாரி வேலை.. யுபிஎஸ்சி அறிவிப்பு! 1,358 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications