Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாகூர் தர்ஹா சந்தனக்கூடு விழா! கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்! ஜனவரி 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

Subscribe to Oneindia Tamil

நாகை: இஸ்லாமியர்களின் ஆன்மிகத் தலங்களில் ஒன்றான நாகூர் தர்ஹா பெரிய கந்தூரி விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.

இதனிடையே நாகூர் தர்ஹா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு வரும் ஜனவரி 3ஆம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.

ஆண்டுதோறும் நாகூர் தர்ஹா சந்தனக்கூடு கந்தூரி விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அங்கு திரளானோர் குவிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

District Collector has declared 3rd January as a local holiday for Nagai district

இதனிடையே நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் என அனைத்துக்கும் ஜனவரி 3ஆம் தேதி அரசு விடுமுறை என்பது கவனிக்கத்தக்கது.

நாகூர் தர்ஹா ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்காக தமிழக அரசின் வனத்துறை சார்பில் 45 கிலோ சந்தனக்கட்டைகள் சில மாதங்களுக்கு முன்பு தான் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையினை ஏற்று பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்கி வருகின்றது.

நாகூர் தர்ஹா சந்தனக் கூடு விழாவுக்கு வருகை தருவோருக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், தர்ஹா நிர்வாக கமிட்டியும் இணைந்து ஏற்பாடு செய்து வருகிறது.

இதனிடையே கூட்டம் கட்டுக்கடங்காமல் திரளும் என்பதால் திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+