மத்திய அரசுக்கு அஞ்சி தமிழக நலன்களை விட்டு கொடுக்கிறது எடப்பாடி அரசு.. முத்தரசன் தாக்கு
நாகை: மாநிலங்கள் மீது புதிய கல்வி கொள்கையை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசின் செயல், ஜனநாயகத்திற்கு விரோதமானது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே மத்திய பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என போராடி வருகிறோம். இந்த சூழலில் புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு செயல்படுத்த நினைப்பது, கடும் கண்டனத்திற்குரியது என்றார்.

கஸ்தூரிரங்கனின் அறிக்கை, எஸ்சி, எஸ்டி, பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் உரிமைக்கு எதிராக உள்ளது. மனுதர்மத்தை மீண்டும் புகுத்த மத்திய அரசு நினைப்பது இதிலிருந்து அப்பட்டமாக தெரிகிறது என சாடினார்.
புதிய கல்வி கொள்கை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை, இந்தி மற்றும் ஆங்கில மொழியில் உள்ளது. இதனை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தினார். மேலும் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் தமிழக அரசு கேட்க வேண்டும்.
இதற்காக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு விரைந்து ஏற்பாடு செய்ய வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு பாடத் திட்டத்திற்கும், நீட் நுழைவு தேர்விற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. நீட் நுழைவு தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பன்னிரெண்டாம் வகுப்பு பாடத் திட்டத்தில் இடம் பெறுவது இல்லை. பிறகு எதற்காக நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.
கல்வி சார்ந்த விவகாரங்களில் கொள்கையை திணிக்க நினைப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது இல்லை. மேலும் பாடப்புத்தகங்களில் மதத்தை திணிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.
புதிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்துக்களை மாநில அரசு பதிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாடு என்பதை தமிழக அரசு தெளிவாக கூற வேண்டும். ஆனால் மத்திய அரசுக்கு பயந்து கொண்டு தமிழகத்தின் நலன்களையும், உரிமைகளையும் விட்டு கொடுப்பதில் தான் எடப்பாடி அரசு முந்தி கொண்டு நிற்கிறது.
இதற்கு உதாரணங்களாக ஹைட்ரோ கார்பன் திட்டம், பசுமை வழிச்சாலைத் திட்டம், உயர்மின் கோபுரங்கள் அமைப்பு என அடுக்கி கொண்டே செல்லலாம். அந்த அளவிற்கு மக்கள் நலன்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த தீவிரம் காட்டி வருகின்றன என குற்றம் சுமத்தினார்.
தமிழக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் முத்தரசன் ஆவேசமாக கூறினார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications