மத்திய அரசுக்கு அஞ்சி தமிழக நலன்களை விட்டு கொடுக்கிறது எடப்பாடி அரசு.. முத்தரசன் தாக்கு
நாகை: மாநிலங்கள் மீது புதிய கல்வி கொள்கையை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசின் செயல், ஜனநாயகத்திற்கு விரோதமானது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே மத்திய பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என போராடி வருகிறோம். இந்த சூழலில் புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு செயல்படுத்த நினைப்பது, கடும் கண்டனத்திற்குரியது என்றார்.

கஸ்தூரிரங்கனின் அறிக்கை, எஸ்சி, எஸ்டி, பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் உரிமைக்கு எதிராக உள்ளது. மனுதர்மத்தை மீண்டும் புகுத்த மத்திய அரசு நினைப்பது இதிலிருந்து அப்பட்டமாக தெரிகிறது என சாடினார்.
புதிய கல்வி கொள்கை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை, இந்தி மற்றும் ஆங்கில மொழியில் உள்ளது. இதனை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தினார். மேலும் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் தமிழக அரசு கேட்க வேண்டும்.
இதற்காக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு விரைந்து ஏற்பாடு செய்ய வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு பாடத் திட்டத்திற்கும், நீட் நுழைவு தேர்விற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. நீட் நுழைவு தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பன்னிரெண்டாம் வகுப்பு பாடத் திட்டத்தில் இடம் பெறுவது இல்லை. பிறகு எதற்காக நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.
கல்வி சார்ந்த விவகாரங்களில் கொள்கையை திணிக்க நினைப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது இல்லை. மேலும் பாடப்புத்தகங்களில் மதத்தை திணிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.
புதிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்துக்களை மாநில அரசு பதிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாடு என்பதை தமிழக அரசு தெளிவாக கூற வேண்டும். ஆனால் மத்திய அரசுக்கு பயந்து கொண்டு தமிழகத்தின் நலன்களையும், உரிமைகளையும் விட்டு கொடுப்பதில் தான் எடப்பாடி அரசு முந்தி கொண்டு நிற்கிறது.
இதற்கு உதாரணங்களாக ஹைட்ரோ கார்பன் திட்டம், பசுமை வழிச்சாலைத் திட்டம், உயர்மின் கோபுரங்கள் அமைப்பு என அடுக்கி கொண்டே செல்லலாம். அந்த அளவிற்கு மக்கள் நலன்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த தீவிரம் காட்டி வருகின்றன என குற்றம் சுமத்தினார்.
தமிழக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் முத்தரசன் ஆவேசமாக கூறினார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications