Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவனீச்சிங்களா! வேளாங்கண்ணி சர்ச்சில் அண்ணாமலை.. என்ன பிரார்த்தனை தெரியுமா? அந்த வார்த்தை தான் ஹைலைட்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்டா மாவட்டங்களில் ‛என் மண்-என் மக்கள்' யாத்திரையை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று அவர் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார். இந்த பிரார்த்தனையின்போது தேவாலய தந்தை கூறிய விஷயத்தை கேட்டு அவர் நெகிழ்ச்சியடைந்தார்.

தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சியை பலப்படுத்தும் பணியில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

 En Mann En Makkal Yatra: Tamil Nadu BJP president Annamalai prayer at Velankanni church in Nagapattinam district

இதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் ‛என் மண்.. என் மக்கள்' எனும் பெயரில் பாதயாத்திரையை அண்ணாமலை தொடங்கி நடத்தி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

 En Mann En Makkal Yatra: Tamil Nadu BJP president Annamalai prayer at Velankanni church in Nagapattinam district

இந்த பாதயாத்திரை தென்மாவட்டம், கொங்கு மாவட்டங்களில் நிறைவு பெற்றுள்ளது. பல இடங்களில் அண்ணாமலைக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர். இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் ஓட்டு சதவீதம் என்பது முந்தைய ஆண்டுகளை விட அதிகரிக்கும் என கட்சி மேலிடம் நம்புகின்றனர். இந்நிலையில் தான் தற்போது டெல்டா மாவட்டங்களில் அண்ணாமலையின் பாதயாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது.

 En Mann En Makkal Yatra: Tamil Nadu BJP president Annamalai prayer at Velankanni church in Nagapattinam district

இந்த நிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா சர்ச்சில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரார்த்தனை செய்தார். என் மண், என் மக்கள் பாதயாத்திரையின் சட்டையை அணிந்தே அவர் சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்தார். சர்ச்சில் இருந்த போதகர்கள் அண்ணாமலையை வரவேற்று ஆசி வழங்கினர். அதன்பிறகு அண்ணாமலை அவர்களுடன் பேசி கொண்டிருந்தார்.

வேளாங்கண்ணி தேவாலயத்தில் பிரார்த்தனை செய்த போட்டோக்களை அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‛‛இன்றைய தினம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்துக்குச் சென்று, மாதாவைத் தரிசித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தேவாலயத் தந்தை அவர்களிடம் உரையாடும்போது, உத்தரகாண்ட் மாநிலச் சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட, வேளாங்கண்ணி தேவாலயத்தில், சிறப்புப் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தியிருப்பதை அறிந்து மனம் நெகிழ்ந்தேன்.

பல நூற்றாண்டுகள் தொன்மையான வேளாங்கண்ணி ஆலயம், மத வேறுபாடுகள் இல்லாது அனைவரும் வழிபடும் தேவாலயமாக இருப்பது தமிழகத்துக்கே பெருமை. தமிழக மக்கள் அனைவரின் நலனுக்காகவும், மாதாவிடம் பிரார்த்தித்துக் கொண்டோம்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+