அரசு காப்பக குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை! Good touch, Bad touch சொல்லி தர வந்த மனநல ஆலோசகர் கைது
நாகை: நாகை அருகே அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மனநல ஆலோசகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். குட் டச் , பேட் டச் குறித்து குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வந்த அவரே இது போல் நடந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாமந்தான்பேட்டையில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் சுனாமியில் சிக்கி தாய் அல்லது தந்தையை இழந்தவர்களை படிக்க வைக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த காப்பகத்தில் 65-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் 5 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. விடுதி கண்காணிப்பாளர் சசிகலா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து நாகை அரசு காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் கொடுத்த மனநல ஆலோசகர் சத்யபிரகாஷ் கைது செய்யப்பட்டார். இவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குட் டச் , பேட் டச் குறித்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வந்த அவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது விசாரணை அம்பலமானது.
குழந்தைகள் காப்பகத்தில் பெண் மன நல ஆலோகரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எழிலரசி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications