80 வயசு சின்னப்பொண்ணு கிட்ட டபுள் மீனிங்கில் பேசிய நாகப்பட்டினம் மீன் வியாபாரி! காட்டி தந்த சிசிடிவி
நாகப்பட்டினம்: தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் சென்னை, திருப்பூர், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் எனப் பல்வேறு பகுதிகளில் தனியாக வசிக்கும் மூதாட்டிகளைக் குறிவைத்து அரங்கேறும் கொடூர பாலியல் அத்துமீறல்களும் கொலைகளும் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளன. இந்த சூழ்நிலையில், நாகப்பட்டினத்தில் 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவமும், அதன் பின்னணியும் முதியோர் பாதுகாப்பில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை ஆணித்தரமாக உணர்த்துகிறது. அப்படி என்ன நடந்தது?
நாகப்பட்டினம் நகரின் மையத்தில் இப்படியொரு கொடுமை நடந்துள்ளது.. அங்குள்ள மீன் மார்க்கெட் பகுதியில், கடந்த 9ம் தேதி 80 வயதான மூதாட்டி ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக இறந்து கிடப்பதாக வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது.

சிசிடிவி - 80 வயது சின்னப்பொண்ணு
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி ஆய்வு செய்துள்ளனர்.. அப்போது அவரது முகம் நாய்களால் கடிக்கப்பட்டு சிதைந்திருப்பது தெரியவந்தது.
பிறகு உடனடியாக போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பாட்டியின் உடலை அனுப்பி வைத்து, இது தொடர்பான தீவிர விசாரணையையும் போலீசார் மேற்கொண்டனர். அப்போதுதான் இறந்து போன பாட்டி, நாகப்பட்டினம் வடக்கு நல்லியான் தோட்டத்தைச் சேர்ந்த சின்னப்பொண்ணு என்பதும், அவர் அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்ததும் கண்டறியப்பட்டது.
சின்னப்பொண்ணு, மீன் வியாபாரி
இதையடுத்து கொலையாளியை பிடிக்க அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வந்தனர்... சிசிடிவி அடிப்படையில், சம்பவத்தன்று அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த முதியவர் ஒருவரை நேற்றுமுன்தினம் இரவு போலீசார் பிடித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இடையர் தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பதும், இப்போது நாகப்பட்டினம் சட்டையப்பர் வீதியில் உள்ள ஒரு தனியார் முதியோர் காப்பகத்தில் தங்கி மீன் வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது.. பிறகு அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின,
சடலத்துடன் உறவு?
அதாவது மீன் வியாபாரத்திற்கு வரும்போது சின்னப்பொண்ணுவுடன் ராமசாமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அடிக்கடி மார்க்கெட் வரும்போதெல்லாம் சின்னப்பொண்ணுவுடன் இரட்டை அர்த்தத்தில் பேசி வந்தாராம்..
சம்பவத்தன்று இரவு சின்னப்பொண்ணுவிடம் ராமசாமி பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றபோது, அதற்கு அவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி, சாலையோரத்தில் கிடந்த ஒரு பெரிய கல்லைத் தூக்கி மூதாட்டியின் தலையில் போட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளார். மேலும், சின்னப்பொண்ணு இறந்தது தெரிந்த பிறகும், அவரை பலாத்காரம் செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமசாமியைக் கைது செய்து, நாகப்பட்டினம் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழகத்தில் பாட்டிகளுக்கு தொல்லை
இந்த நாகப்பட்டினம் கொடூரம் மட்டுமன்றி, தமிழகத்தில் இப்படி ஒரு மாத காலமாகவே மூதாட்டிகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன.. சென்னை புளியந்தோப்பு, வேளச்சேரி, திருப்பூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பாதுகாப்பற்ற நிலையில் தனியாக வசிக்கும் மூதாட்டிகளைக் குறிவைத்து நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளும் அத்துமீறல்களும் அதிர்ச்சியூட்டும் வகையில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில் கடலூரில் 93 வயது பாட்டிக்கு நேர்ந்த கொடூரத்தைத் தொடர்ந்து, தற்போது நாகப்பட்டினத்தில் 80 வயது மூதாட்டிக்கு நடந்துள்ள இந்த அத்துமீறல் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளதோடு, வயது முதிர்ந்த தாய்மார்களின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பெண் படைத் திட்டம்
இத்தகைய வக்கிர புத்தி கொண்ட குற்றவாளிகளின் பலவீனமான இலக்காக மாறும் மூதாட்டிகளைப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ள நிலையில், அவர்கள் மீதான கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு வளையத்திற்கான கோரிக்கைகளும் தற்பொழுது மிக வலுவாக எழுந்துள்ளன.
அரசு கொண்டு வந்துள்ள "சிங்கப்பெண் படைத் திட்டம்", இளம்பெண்கள் மட்டுமின்றி, தனியாக வாழும் மூதாட்டிகளின் பாதுகாப்பிற்கும் ஒரு பலத்த அரணாக விளங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் நம் தாய்மார்களை வக்கிரக் காம மிருகங்களிடமிருந்து காக்க, இத்திட்டத்தின் மூலம் காவல்துறை இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி, முதியோர் பாதுகாப்புப் பணிகளில் இரும்புக்கரம் கொண்டு குற்றவாளிகளை ஒடுக்க வேண்டும் என்பதே நம்முடைய தாழ்மையான கோரிக்கையாகும்...!!
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications