இசக்கி அம்மன் கோவில் உண்டியலில் கை வைத்த ஆனந்த்.. கட்டி வைத்து உதைத்த மக்கள்
Recommended Video

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோவிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப காலமாக கோவிகளில் உண்டியலை உடைத்து திருடும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள நைனா புதூரில் இசக்கி அம்மன் கோவிலில் நேற்றிரவு வாலிபர் ஒருவர் புகுந்து கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த நபர் ஒருவர் பார்த்து ஊர்மக்களிடம் தகவல் கொடுக்க, ஊர் மக்கள் திரண்டு வந்த அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவரை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அந்த நபரிடம் விசாரித்தனர். அதில் அவர் திருடன் எனத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சுசீந்திரம் போலீசார் அங்கு வந்து அந்த நபரிடம் விசாரணை செய்த போது அவரது பெயர் ஆனந்த் (22) என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து போலீஸார் அந்த நபரைக் கைது செய்து ஆட்டோவில் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications