இசக்கி அம்மன் கோவில் உண்டியலில் கை வைத்த ஆனந்த்.. கட்டி வைத்து உதைத்த மக்கள்
Recommended Video

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோவிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப காலமாக கோவிகளில் உண்டியலை உடைத்து திருடும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள நைனா புதூரில் இசக்கி அம்மன் கோவிலில் நேற்றிரவு வாலிபர் ஒருவர் புகுந்து கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த நபர் ஒருவர் பார்த்து ஊர்மக்களிடம் தகவல் கொடுக்க, ஊர் மக்கள் திரண்டு வந்த அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவரை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அந்த நபரிடம் விசாரித்தனர். அதில் அவர் திருடன் எனத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சுசீந்திரம் போலீசார் அங்கு வந்து அந்த நபரிடம் விசாரணை செய்த போது அவரது பெயர் ஆனந்த் (22) என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து போலீஸார் அந்த நபரைக் கைது செய்து ஆட்டோவில் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications