கேரளாவில் நவராத்திரி.. கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்ட சுவாமி விக்கிரகங்கள்
Recommended Video
நாகர்கோவில்: மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி, கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் அரண்மனையில் மன்னரின் உடை வாள் உடன் சாமி விக்கிரகங்கள் நாளை புறப்படும் நிகழ்சி நடைபெற உள்ளன.
அதில் பங்கேற்பதற்காக சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் தமிழக கேரளா இரு மாநில போலிசார் அணிவகுப்புடன் புறப்பட்டு சென்றது. பக்தர்கள் வழியனுப்பி வைத்தனர்.

மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பத்மநாபபுரம் அரண்மனை யிலிருந்து மன்னரின் உடை வாள் உடன் தேவாரகோட்டு சரஸ்வதி தேவி, குமார கோவில் முருகன் மற்றும் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்கிரகங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்வது வழக்கம்.

அதன் படி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் அரண்மனையில் மன்னரின் உடை வாள் உடன் சாமி விக்கிரகங்கள் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற உள்ளன. அதில் பங்கேற்பதற்காக சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் தமிழக கேரளா இரு மாநில போலிசார் அணிவகுப்புடன் புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மனுக்கு கோவில் சார்பாக திருக்கண் சார்த்தி வழிபாடு நடந்தது. பின்னர் நான்கு ரதவீதிகளிலும் அம்மன் சிலை உலா வந்தது. அம்மன் பல்லக்குடன் பலர் உடன் சென்றனர். அப்போது, பக்தர்கள் தங்களின் வீடுகளின் முன் விளக்கேற்றியும், திருக்கண்சாத்தியும், மலர் தூவியும் அம்மனை வழிபட்டு வழியனுப்பினர்.

அம்மன் ஊர்வலத்தின் முன் பெண்கள் முத்துக்குடை ஏந்தியும், கையில் திருவிளக்கேற்றியும், சிவாச்சாரியார்கள் பாடல் பாடியும், சிலம்பாட்டம், சிறுவர்களின் நடனம் ஆகியவற்றுடன் அம்மன் சிலை ஊர்வலமாக புறப்பட்டது. தமிழக கேரளா இரு மாநில போலிசார் அணிவகுப்புடன் சுவாமி ஊர்வலம் புறப்பட்டு சென்றது. பக்தர்கள் வழியனுப்பி வைத்தனர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications