சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகர்.. வீட்டிற்கு நேரடியாகச் சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா!

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: சாலை விபத்தில் உயிரிழந்த தனது ரசிகர் மன்ற செயலாளரின் குடும்பத்தினருக்கு நடிகர் சூர்யா ஆறுதல் கூறினார்.

நாமக்கல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (25). இவருக்குத் திருமணம் ஆகி 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

 Actor Surya offers his condolences to family of his fan club secretary who died in a road accident

இந்த நிலையில், இவர் கடந்த 21ஆம் தேதி நாமக்கல் துறையூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது நாமக்கல் காவல் நிலையம் அருகே சாலையின் வளைவில் திரும்பும் போது, எதிர்பாராத விதமாக லாரி ஒன்று இவர் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெகதீஷ்சை சிகிச்சைக்காகச் சேலத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், எதிர்பாராத விதமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போதே வழியிலேயே ஜெகதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்த ஜெகதீஷ் சூர்யா ரசிகர் மன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்க நாமக்கல் மேட்டுத் தெருவில் உள்ள ஜெகதீஷ் வீட்டிற்கு நேற்று இரவு நடிகர் சூர்யா சென்றார்.

ஜெகதீஷனின் மனைவி ராதிகா மற்றும் 3 வயது பெண் குழந்தைக்குக் கண் கலங்கியவாறு நடிகர் சூர்யா ஆறுதல் கூறினார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+