நாமக்கல்லில் முதல்வருக்கு வரலாறு காணாத வரவேற்பு! 13 கி.மீ.தூரம் அணி வகுத்து நின்ற 1 லட்சம் பேர்!
நாமக்கல்: நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாமக்கல் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வரலாறு காணாத வகையில் வரவேற்பு கொடுத்து அசத்தியிருக்கிறார் ராஜேஷ்குமார் எம்.பி.
13 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு லட்சம் பேரை திரட்டி நாமக்கல் மாவட்ட எல்லையில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து செந்தில்பாலாஜியின் சாதனையை முறியடித்துள்ளார் ராஜேஷ்குமார்.
நாளை நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் தமிழகம் முழுவதுமிருந்து 10,000 பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாமக்கல் மாநாடு
திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள் - நகராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் - பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் - நகர்ப்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை நாமக்கல்லில் நடைபெறுகிறது.

அனுமதி பேட்ஜ்
காலை 9:30 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடைபெறும் இந்த மாநாட்டில், பல்வேறு தலைப்புகளின்கீழ் பேச்சாளர்கள் சிறப்புரை ஆற்றவுள்ளார்கள். திமுக நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களுக்கு வந்த அழைப்பிதழுடன் இணைக்கப்பட்டுள்ள அனுமதி பேட்ஜை கையுடன் எடுத்து வந்தால் மட்டுமே மாநாடு திடலில் அனுமதிக்கப்படுவார்கள். இதனிடையே இது தொடர்பாக நேற்று அமைச்சர் கே.என். நேரு விடுத்த அறிவுறுத்தலில், திமுக நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் காலை 8.30 மணிக்கு முன்னரே அவரவர் இருக்கைகளில் அமர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

முதல்வர் பயணம்
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நாமக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வரலாறு காணாத வகையில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க திட்டமிட்ட நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார், சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு லட்சம் பேரை திரட்டி மாஸ் காட்டியிருக்கிறார். கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி கொடுத்த வரவேற்பைக் காட்டிலும் ஒரு படி மேலாக வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தார் ராஜேஷ்குமார்.

பென்ஸ் வாகனம்
மாவட்டப் பொறுப்பாளர் என்ற முறையில் ராஜேஷ்குமாரையும், அமைச்சர் மதிவேந்தனையும் நாமக்கல் மாவட்ட எல்லையில் தனது பென்ஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், மாநாடு முன்னேற்பாடுகள் பற்றி கேட்டறிந்திருக்கிறார். இதனிடையே எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் நாமக்கல் வருகை தந்த முதல்வர் ஸ்டாலினை வரவேற்க 40,000க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்திருந்தது கவனிக்கத்தக்கது.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications