எதிர்பார்க்காத வரவேற்பு; 3 மணி நேரம் வாழ்த்துமழை; நெகிழ்ந்த திமுக ராஜ்யசபா வேட்பாளர் ராஜேஷ்குமார்..!
நாமக்கல்: திமுக ராஜ்யசபா வேட்பாளர் ராஜேஷ்குமாருக்கு அவரது சொந்த ஊரான நாமக்கல்லில், 3,000 -க்கும் மேற்பட்டோர் 3 மணி நேரம் இடைவிடாது நேரில் சந்தித்து வாழ்த்து கூறி அவரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு ராஜ்யசபா இடங்களுக்கு அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து திமுக சார்பில் ராஜேஷ்குமார் மற்றும் கனிமொழி சோமு ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதில் ராஜேஷ்குமார் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ளார். கடந்த 14-ம் தேதி ராஜ்யசபா வேட்பாளராக இவரது பெயர் அறிவிக்கப்பட்ட போது சென்னையில் தான் இருந்தார். இதனால் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அன்று மாலையே நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து சென்னையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டியவர்களுக்கு நன்றி கூறி விட்டு நேற்று சொந்த ஊரான நாமக்கலுக்கு வந்தார். அப்போது அங்கு அவரே எதிர்பார்க்காத வகையில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தது.
சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு சென்று ராஜேஷ்குமாருக்கு வரவேற்பு அளித்ததுடன் அப்படியே அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கவும் அவரை அழைத்துச் சென்றனர். அங்கு வந்திருந்த சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., நாமக்கல் எம்.எல்.ஏ. மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோரது கரங்களை பற்றியபடி நாமக்கல் மாவட்டத்தில் கோஷ்டி அரசியலே கிடையாது என்பதை திமுக தலைமைக்கு வெளிப்படுத்தினார்.
இதற்கடுத்தபடியாக சுமார் 3 மணி நேரம் இடைவிடாது தொண்டர்களும், நிர்வாகிகளும் ராஜேஷ்குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதனிடையே இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் நாமக்கல் மாவட்ட திமுக முன்னோடியுமான காந்திச்செல்வன் கலந்துகொள்ளவில்லை.
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் பணம் செலுத்தி, இரண்டில் ஒரு தொகுதியை ராஜேஷ்குமார் எதிர்பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் எதிர்பார்த்தபடி எம்.எல்.ஏ. சீட் கிடைக்கவில்லை. இருப்பினும் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் தனது நிர்வாகத்திற்குட்பட்ட சேந்தமங்கலம், ராசிபுரம், நாமக்கல் ஆகிய மூன்று தொகுதிகளையும் கைப்பற்றிக் கொடுத்து முதலமைச்சர் ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பிடித்தார்.
-
இந்த நாளுக்காகத் தான் வெயிட்டிங்! திருச்சியை திணற வைக்கும் திமுக! ஸ்டாலின் கையில் ‘மெகா’ அஸ்திரம்! -
கண்ணைக் காட்டிய உதயநிதி..அறிவாலயத்தில் குவிந்த வாரிசுகள்! 2026 தேர்தல் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்! -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
பழைய ஓய்வூதிய திட்டம் என்னவானது? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத திமுக அரசு! அன்புமணி கடும் விமர்சனம் -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
UPSC தேர்வு.. தமிழ்நாட்டில் இருந்து வென்ற 60 பேரில்.. 56 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயின்றவர்கள் -
திடீரென மயங்கி விழுந்த கிரிஷ் சோடங்கர்.. கைத்தாங்கலாக தூக்கி வந்த காங்கிரஸ் நிர்வாகிகள்! -
மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூசக பதில்! -
இதே திருச்சியில் பெண்களுக்கு ரூ.1000 அறிவிப்பை வெளியிட்டேன்.. திருச்சி மாநாட்டுக்கு ஸ்டாலின் அழைப்பு -
PTRக்கு எதிராக புரட்சிப் படை? பத்திகிட்டு எரியுது மதுரை! களத்துக்கு வந்த மாப்பிள்ளை! பரபர பாலிடிக்ஸ் -
க்ளோஸ்.. சுள்ளென சுட்டெரிக்கும் உதயசூரியன்.. சூடான தேர்தல் களம்! அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த திமுக!












Click it and Unblock the Notifications