திருச்செங்கோடு தொகுதி திமுகவுக்கே! கே.என்.நேருவிடம் மன்றாடிய உடன்பிறப்புகள்! கொங்கு ஈஸ்வரன் கதி?
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியை தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்கே திமுக தலைமை ஒதுக்கி வரும் நிலையில், அடுத்த சட்டமன்றத் தேர்தலிலாவது திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அமைச்சர் கே.என்.நேருவிடம் ஓபன் மேடையிலேயே திமுக ஒன்றியச் செயலாளர் தங்கவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் மூலம் திருச்செங்கோடு தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரனுக்கு அடுத்த முறை மீண்டும் கொடுக்க கூடாது என்பதை அவர் சூசகமாக இவ்வாறு தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் இருக்கின்ற சூழலில் இப்போது அதைப்பற்றி எதற்கு பேசிக் கொண்டு என நினைத்தாரோ தெரியவில்லை, அமைச்சர் நேரு பெரியளவில் ரியாக்ஷன் காட்டவில்லை.

நாமக்கல் மாவட்ட திமுகவை பொறுத்தவரை கிழக்கு, மேற்கு என இரண்டு அமைப்புகளாக உள்ளது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக ராஜேஷ்குமார் எம்.பி.யும், மேற்கு மாவட்ட திமுக செயலாளராக மதுரா செந்திலும் இருக்கிறார்கள். இதில் மதுரா செந்தில் அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் தேர்தலின் மூலம் புதிதாக பதவிக்கு வந்தவர்.
ராஜேஷ்குமார், மதுரா செந்தில் ஆகிய இருவருமே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பெற்றிருப்பவர்கள். இந்நிலையில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத் திறப்பு விழா மூன்று நாட்களுக்கு முன்னர் திருச்செங்கோட்டில் நடைபெற்ற நிலையில், அதில் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு கலந்துகொண்டார்.
அப்போது அந்த விழாவில் பேசிய திருச்செங்கோடு திமுக ஒன்றியச் செயலாளர் வட்டூர் தங்கவேல், திருச்செங்கோடு தொகுதியை ஒவ்வொரு தேர்தலின் போதும் கூட்டணிக் கட்சிகளுக்கே தலைமை ஒதுக்குவதாக கவலை தெரிவித்த அவர் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலாவது திமுக நேரடியாக போட்டியிட வேண்டும் என நேருவிடம் ஓபன் ஸ்டேஜில் கோரிக்கை விடுத்தார்.
-
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு












Click it and Unblock the Notifications