திமுக வெற்றி பெற்றுவிட்டால்… பொய் வழக்குகள் போட்டு துன்புறுத்துவார்கள்… அமைச்சர் தங்கமணி பேச்சு
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: திமுக வெற்றி பெற்றுவிட்டால் பொய் வழக்குகள் போட்டு அதிமுகவினரை துன்புறுத்துவார்கள் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்துவிட்டோம் என்று மெத்தனம் காட்டாமல் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்றார்.

முன்னதாக, ஒரே தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், தேர்தலில் வாக்குச்சாவடி ஊழியர்கள் அரசின் மீது கோபத்தில் இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் கேட்டது நாம் தரவில்லை.
ஆகவே, பூத் ஏஜென்டாக செல்லும் அதிமுக மற்றும் கூட்டணியினர் வெளியில் சென்றாலும் மற்றொருவரை அமர வைத்து விட்டு செல்ல வேண்டும். வாக்குப்பெட்டியை மூடி சீல் வைக்கும் வரை கண்ணும் கருத்துமாக பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications