நாமக்கலில் 1 வீட்டிற்கு 5000, 4 வீட்டிற்கு 20000.. ஒரே நிமிடத்தில் சம்பாதித்த அரசு ஊழியர்.. ட்விஸ்ட்
நாமக்கல்: புதிய மின் இணைப்பு, சொத்து வரி பெயர் மாற்றம், சொத்து வரி நிர்ணயம், பட்டா பெயர் மாற்றம், நில அளவை என வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் தான் இன்றைக்கு சில அதிகாரிகள் லஞ்சம் கேட்டு கைதாகுவது அதிகமாக நடக்கிறது. நாமக்கல்லில் சொத்துவரியை பெயர் மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இன்றைக்கு சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய சில அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். பொதுவாக சொத்தின் உரிமையாளர் மாறியவுடன் (விற்பனை, தான செட்டில்மென்ட் அல்லது வாரிசு உரிமை), சம்பந்தப்பட்ட மாநகராட்சி அல்லது நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய ஆவணங்கள்
இதற்கு கிரயப் பத்திரம் அல்லது தான செட்டில்மென்ட் பத்திரத்தின் நகல், வில்லங்கச் சான்றிதழ், முந்தைய சொத்து வரி ரசீதுகள், வாரிசுரிமை மூலம் மாற்றம் செய்யப்படுவதாக இருந்தால், வாரிசுச் சான்றிதழ் ஆகியவை தேவைப்படும். ஆனால் நாமக்கல் மாநகராட்சியில் 4 வீடுகளுக்குப் பெயர் மாற்றம் செய்ய, ஒரு வீட்டிற்கு ₹5,000 வீதம் மொத்தம் ₹20,000 லஞ்சம் கேட்ட வருவாய் உதவி ஆய்வாளர் சங்கர் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
என்ன நடந்தது
விவசாயி நாமக்கல் மாநகராட்சிக்குப்பட்ட சின்ன அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 57 வயதாகும் கதிர்வேல் என்ற விவசாயிக்கு சொந்தமாக அப்பகுதியில் 4 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளைத் தனது மகன் பெயருக்கு அவர் எழுதி கொடுத்திருக்கிறார். எனவே சொத்து விவரத்தில் பெயர் மாற்றம் செய்து வரி விதிக்க வேண்டும் என நாமக்கல் மாநகராட்சியில் வருவாய் உதவி ஆய்வாளராக (பில் கலெக்டர்) பணியாற்றி வரும் சங்கர் (56) என்பவரை அணுகியிருக்கிறார்.
ஒரு வீட்டிற்கு 5000
ரூ. 20 ஆயிரம் லஞ்சம் சொத்து வரியை மாற்றம் செய்ய ஒரு வீட்டிற்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வருவாய் உதவி ஆய்வாளர் சங்கர் கூறினாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாத கதிர்வேல் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் பில் கலெக்டர் குறித்து புகார் செய்தார்.
இதையடுத்து போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூ. 20 ஆயிரத்துடன் நேற்று கதிர்வேல், மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் அருகில் உள்ள டீக்கடைக்கு அவரை வரவழைத்த சங்கர் அங்கு ரூ. 20 ஆயிரத்தை லஞ்சமாக வாங்கியதாக சொல்லப்படுகிறது.
மாநகராட்சி ஊழியர் கைது
அதைத் தொடர்ந்து நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் தனது அறைக்குச் சென்ற சங்கரை, மறைந்து இருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் கையும், களவுமாகப் பிடித்து அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications