நாமக்கல் மணல் கடத்தல்.. லாரி, கார் சிக்கிய போது நடந்த ட்விஸ்ட்.. சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்
நாமக்கல்: கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் காவிரி ஆற்றில் மணலை திருடி மோகனூர் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி விற்பனை செய்வதாக நாமக்கல் மாவட்ட எஸ்பி விமலாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நாமக்கல்-திருச்சி சாலையில் வளையப்பட்டி பகுதியில் வாகன சோதனை நடத்தினார். அதில் பிடிப்பட்டவர்களுக்கு உதவிய விவகாரத்தில் நாமக்கல் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கரூர், நாமக்கல் மாவட்டங்களில் காவிரி ஆறு பாய்ந்தோடுகிறது. இங்கு அடிக்கடி மணல் திருட்டு நடைபெறுகிறது. மணல் திருடர்களை போலீசாரும் அதிரடியாக கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் காவிரி ஆற்றில் மணலை திருடி மோகனூர் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நாமக்கல்-திருச்சி சாலையில் வளையப்பட்டி பகுதியில் வாகன சோதனை நடத்தினார்.

அப்போது கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் இருந்து லாரியில் மணல் கடத்தி வந்ததும், அதற்கு ஒரு கார் பாதுகாப்பாக வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து லாரியை அங்கிருந்த போலீசாரையும், காரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் என்பவரையும் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வர கூடுதல் எஸ்பி கூறிவிட்டு, போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.
சிறிது நேரத்தில் லாரி மட்டும் போலீஸ் நிலையத்திற்கு வந்தது. ஆனால் கார் வரவில்லை. மாறாக காரை ஓட்டி வரச்சொன்ன சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மட்டும் போலீஸ் நிலையம் வந்தார். இதில் அதிர்ச்சி அடைந்த கூடுதல் எஸ்பி காரை பற்றி விசாரித்தபோது, 'கார் ஸ்டார்ட் ஆகவில்லை என்பதால், உரிமையாரை எடுத்து வரச்சொல்லிவிட்டு வந்துவிட்டதாக' சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கூறியிருக்கிறார்.
இதனால் சந்தேகம் அடைந்த கூடுதல் எஸ்பி, இது குறித்து விசாரணை நடத்தினார். அப்போது மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கார் மற்றும் அதன் உரிமையாளரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தப்பவிட்டதும், அதற்கு ஏட்டு கோவிந்தராஜன் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடுதல் எஸ்பி பரிந்துரை செய்தார். இதையடுத்து மணல் கடத்தல் விவகாரத்தில் லாரிக்கு பாதுகாப்பாக வந்த காரை தப்பவிட்ட புகாரில் மோகனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், போலீஸ் ஏட்டு கோவிந்தராஜன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து எஸபி விமலா உத்தரவிட்டார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications