நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்களுக்கு வந்த குட் நியூஸ்.. 2 கோடி முட்டைகளை இறக்க ஓமன் அரசு அனுமதி!
நாமக்கல்: நாமக்கல்லில் இருந்து ஓமனுக்கு அனுப்பப்பட்ட 2 கோடி முட்டைகளை கப்பலில் இருந்து இறக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. ஓமனுக்கு அனுப்பப்பட்ட ரூபாய் 15 கோடி மதிப்புள்ள முட்டைகள் இறக்குமதி செய்யப்படாமல் கப்பலிலேயே இருந்த நிலையில், இன்று பேச்சுவார்த்தைக்குப் பிறகு முட்டைகளை இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினசரி 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அந்தவகையில் ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும் நாமக்கல் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அண்மையில், ஓமன் நாடு, இந்திய முட்டைகளுக்கு புதிய இறக்குமதி அனுமதி வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்தது. இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் எடை 60 கிராம் இருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
ஆனால், இங்கிருந்து அனுப்பப்படும் முட்டை ஒவ்வொன்றும் 52 கிராம் எடை கொண்டவை. இதன் காரணமாக, துாத்துக்குடி, கொச்சியில் இருந்து ஓமனுக்கு, 45 கன்டெய்னர்களில் அனுப்பப்பட்ட முட்டைகளை இறக்க ஓமன் நாட்டு அரசு அனுமதிக்கவில்லை.
இதனால், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2 கோடி முட்டைகள் 40 கன்டெய்னர்களில் கடலில் கப்பலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஓமன் நாட்டின் முடிவால் முட்டை ஏற்றுமதி மேலும் பாதிக்கும் அபாயம் உள்ளதால், ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்தனர். முட்டைகளை ஓமனில் இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக எம்.பிக்கள் வெளியுறவு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
நாமக்கல்லிருந்து ஓமன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான முட்டைகள் தற்போது அந்நாட்டின் துறைமுகத்தில் கப்பலில் உள்ளது. நாமக்கல்லில் இந்து ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகளை உடனே இறக்குமதி செய்யதிடவும் அதே போன்று கத்தார் நாட்டில் முட்டை ஏற்றுமதியில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கிடவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் ராஜ்யசபா எம்.பி கே.ஆர்.என்.ராஜேஷ்வரன், நாமக்கல் மக்களவை தொகுதி எம்.பி மாதேஸ்வரன் ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், நாமக்கல்லில் இருந்து ஓமனுக்கு அனுப்பப்பட்ட 2 கோடி முட்டைகளை கப்பலில் இருந்து இறக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. ரூபாய் 15 கோடி மதிப்புள்ள முட்டைகள் இறக்குமதி செய்யப்படாமல் கப்பலிலேயே இருந்த நிலையில், இன்று நடைபெற்ற 2வது கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு முட்டைகளை இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications