சிலி நாட்டில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 5.1-ஆக பதிவு.. மக்கள் அச்சம்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: சிலி நாட்டில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது.
சிலி நாட்டின் ஆரிகா நகரிலிருந்து 72 கி.மீ. தொலைவில் நேற்றிரவு 9.32 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்கா புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட உயிர்சேதம் உள்ளிட்ட விவரங்கள் வெளிவரவில்லை. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications