அதே "பேட்டர்ன்".. சீனாவிடம் ஏதோ திட்டம் உள்ளது.. லடாக் மோதலில் எச்சரிக்கும் வெள்ளை மாளிகை.. பின்னணி!
நியூயார்க்: சீனா உலகம் முழுக்க பல நாடுகளிடம் ராணுவ ரீதியாக அத்துமீறுவது போலவே இந்தியாவுடனும் அத்துமீறி வருகிறது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.
இந்தியா சீனா இடையிலான லடாக் மோதலை உலக நாடுகள் எல்லாம் கவனிக்க தொடங்கி உள்ளது. லடாக்கில் சீனா செய்யும் அத்துமீறலை அமெரிக்கா கவனித்து வருகிறது.
இதில் இந்தியாவிற்கு ஆதரவாக இருப்போம் என்று அமெரிக்கா ஏற்கனவே கூறிவிட்டது. அதேபோல் இந்தியாவிற்கு ஆதரவாக படைகளை அனுப்புவோம் என்றும் அமெரிக்கா வெளிப்படையாக கூறியுள்ளது.

இந்தியா எப்படி
இந்த நிலையில் இந்தியா சீனா சண்டை தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில், இந்தியா - சீனா இடையே எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோதலை நாங்கள் தீவிரமாக கவனித்து வருகிறோம். இரண்டு நாடுகளின் நிலைப்பாட்டை விசாரித்து வருகிறது. அவர்களின் பேச்சுவார்த்தைகளை பின் தொடர்ந்து வருகிறோம்.

கவனம்
இரண்டு நாடுகளும் பிரச்சனையை தீர்க்க முயன்று வருவது தெரியும். எல்லை பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பிரச்சனை மேலும் மோசமாக கூடாது என்று இந்தியாவும் - சீனாவும் விரும்புகிறது. இதனால் லடாக் எல்லையில் விரைவில் பிரச்சனை தீரும் என்று எதிர்பார்க்கிறோம். எல்லையில் பழைய நிலைமை திரும்ப வேண்டும் என்பது தான் அமெரிக்காவின் விருப்பம்.

டிரம்ப் கருத்து
அமெரிக்க அதிபர் டிரம்ப் இதில் சீனாவின் செயல்களை கண்காணித்து வருகிறார். சீனா உலகம் முழுக்க அத்துமீறி வருகிறது. உலகின் பிற நாடுகளில் சீனா எப்படி அத்துமீறுகிறதோ அதே போல இந்தியாவிலும் அத்துமீறுகிறது என்று டிரம்ப் நம்புகிறார். இதனால் இந்தியாவிலும் சீனா அதே பேட்டர்ன் மூலம் அத்துமீறலை நிகழ்த்தி வருகிறது. இதைத்தான் நாங்கள் கவனிக்கிறோம்.

சீனா அத்துமீறல்கள்
உலகம் முழுக்க சீனா இப்படி அத்துமீறுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவிடம் வேறு திட்டம் ஏதாவது இருக்கலாம் என்று அதிபர் டிரம்ப் நம்புகிறார். சீனாவின் செயலிகளை இந்தியா தடை செய்துள்ளது. சீனாவிற்கு எதிராக இந்தியாவின் இந்த அதிரடியை வரவேற்கிறோம்.இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் இது வழி வகுக்கும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
-
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications