வந்துவிட்டது சின்னூக் ஹெலிகாப்டர்.. எல்லையில் களமிறக்கிய இந்திய ராணுவம்.. சீனாவிற்கு அதிரடி கேட்!
நியூயார்க்: இந்தியா சீனா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், சீனா அருகே இருக்கும் இந்திய மாநிலங்களில் நவீன ரக சின்னூக் ஹெலிகாப்டர்களை (Chinook heavy-lift helicopters) களமிறக்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.
Recommended Video
இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து பிரச்சனை நிலவி வருகிறது. மே 5ம் தேதி லடாக் எல்லையில் சீனாவின் போர் படைகள் அத்துமீறி உள்ளே நுழைந்தது. அதன் பின் சிக்கிம் எல்லையில் சீனாவின் படைகள் அத்து மீறி வந்தது.
இதனால் இரண்டு எல்லையிலும் சீனா - இந்திய படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக தற்போது இரண்டு நாடுகளும் எல்லையில் தங்கள் படைகளை குவித்து வருகிறது.

சீனா படை
இந்த நிலையில் இந்தியா சீனா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், சீனா அருகே இருக்கும் இந்திய மாநிலங்களில் நவீன ரக சின்னூக் ஹெலிகாப்டர்களை (Chinook heavy-lift helicopters) களமிறக்க இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக அசாமில் தற்போது சின்னூக் ஹெலிகாப்டர்களை ராணுவம் களமிறக்கி உள்ளது .

அசாம் நிலை
அசாமில் உள்ள மோஹன்பாரி பகுதியில் இந்த சின்னூக் ஹெலிகாப்டர் களமிறக்கப்பட்டுள்ளது. அதேபோல் நேற்று அருணாசலப்பிரதேசத்தில் சின்னூக் ஹெலிகாப்டர் களமிறக்கப்பட்டது. இந்த சின்னூக் ஹெலிகாப்டர்கள் மிகவும் நவீன ரக ஹெலிகாப்டர்கள் ஆகும். இதன் மூலம் அதிக எடையை எடுத்து செல்ல முடியும். மலை இருக்கும் பகுதிகள், மேடான பகுதிகளில் அதிக எடை உள்ள பொருட்களை இதன் மூலம் கொண்டு செல்ல முடியும்.

ஹெலிகாப்டர்
இதன் மூலம் இந்திய - சீன எல்லையில் அதிக அளவில் வீரர்களை இந்தியா குவிக்க முடியும். ஒரே சின்னூக் ஹெலிகாப்டர் மூலம் பல வீரர்களை எல்லையில் குவிக்க முடியும். அதேபோல் அதிகமாக வெடிபொருட்கள், ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு இதன் மூலம் எல்லைக்கு செல்ல முடியும். அதிக எடைகளை சுமந்து செல்வதில் இதுதான் பெஸ்ட் என்று கூறுகிறார்கள். தற்போது இதைத்தான் இந்திய ராணுவம் சீன எல்லையில் களமிறக்க உள்ளது.

அதிக சக்தி கொண்ட ஹெலிகாப்டர்
வரும் நாட்களில் சிக்கிம் மற்றும் லடாக் பகுதியில் இந்த சின்னூக் ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட உள்ளது. 20 ஆயிரம் அடி உயரம் வரை அதிக எடையை சுமந்து கொண்டு இது பறக்கும் திறன் கொண்டது . அதேபோல் பெரிய பெரிய வெடிகுண்டுகளை இதில் சுமந்து செல்ல முடியும். இதுவரை பல்வேறு மீட்பு பணிகளில் இந்த சின்னூக் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்தியா வீரர்களை களமிறக்க இதை பயன்படுத்துகிறது.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா?












Click it and Unblock the Notifications