கொரோனா.. 90 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலை.. பல கோடி பேர் வேலை இழப்பார்கள்.. ஐஎம்எப் பகீர் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கொரோனாவால் கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உலக பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்போகிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கொரோனா பாதிப்பு எதிரொலி... பலர் வேலையிழக்கும் அபாயம்

    உலகம் முழுக்க கொரோனா காரணமாக 180 நாடுகள் வரை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், இந்தியா என்ற பெரிய பொருளாதார நாடுகள் எல்லாம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுக்க மொத்தம் 1,790,564 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் உலகம் முழுக்க பொருளாதாரமும் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. உலகின் பொருளாதார இழப்பு குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா நேற்று ஆலோசனை செய்தார். உலகில் 189 நாடுகளின் தலைவர்கள், உலக வங்கி தலைவர்கள், பொருளாதர ஆலோசகர்கள், சில நாடுகளின் வங்கி தலைவர்கள் உடன் ஆலோசனை செய்தார்.

    பேட்டி அளித்தார்

    பேட்டி அளித்தார்

    இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா அளித்துள்ள பேட்டியில் , கொரோனா காரணமாக உலகின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு செல்லும். கிரேட் டிப்ரஷன் என்று அழைக்கப்பட்ட 1930 பொருளாதார சரிவை விட மோசமான பொருளாதார சரிவை நாம் சந்திக்க போகிறோம். உலகில் முக்கியமான வறுமையான நாடுகள் மிக மோசமான பாதிப்பை சந்திக்க போகிறது. 90 வருடங்களில் இல்லாத பொருளாதார சரிவை நாம் சந்திக்க போகிறோம்.

    விரைவில் அறிக்கை வெளியிடுவோம்

    விரைவில் அறிக்கை வெளியிடுவோம்

    வரும் செவ்வாய் கிழமை இது தொடர்பான அறிக்கையை வெளியிடுவோம். கொரோனா காரணமாக எப்படி உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று இதில் விவரங்கள் இடம்பெற்று இருக்கும். முதலில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் 160 நாடுகள் வேகமாக முன்னேறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது. உலகின் முக்கியமான 170 நாடுகள் மிக மோசமான பொருளாதார சரிவை சந்திக்க போகிறது.

    ஆசிய நாடுகள் பாதிக்கும்

    ஆசிய நாடுகள் பாதிக்கும்

    முக்கியமாக ஆப்ரிக்க நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆசியா ஆகிய கண்டங்கள் மிக மோசமான பாதிப்பை சந்திக்க போகிறது. இதனால் உலகம் முழுக்க பல கோடி பேர் வேலை இழப்பார்கள். பல கோடி பேர் பல நாடுகளில் வேலை இழக்கும் நிலை ஏற்படும். மக்கள் உணவிற்கே கஷ்டப்படும் நிலை உலகம் முழுக்க ஏற்படும். 2020 மிக மோசமாக இருக்க போகிறது.

    இரண்டாம் உலகப் போருக்கு பின்

    இரண்டாம் உலகப் போருக்கு பின்

    இரண்டாம் உலகப்போருக்கு பின் மிக மோசமான நிலையை நாம் சந்தித்து இருக்கிறோம். இப்போதே எங்களிடம் 90+ நாடுகள் அவசர உதவி வேண்டும் என்று கேட்க தொடங்கி உள்ளது. கொரோனா இப்போதே நின்றால் கூட அதன் பாதிப்பு தொடர்ந்து இருக்கும். அடுத்த வருடம் பாதி வரை கூட இந்த பாதிப்பு இருக்கும். இப்போதே உலகம் முழுக்க தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மொத்தம் 330 கோடி மக்கள் வேலை இழந்து உள்ளனர். இன்னும் மோசமான நிலை வரும் நாட்களில் வரும் என்று கிரிஸ்டலினா ஜார்ஜிவா குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+