கொரோனா.. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சோதனையை நிறுத்தி வைக்க முடிவு.. ஹு பரபரப்பு அறிவிப்பு!
நியூயார்க்: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிப்பிற்கு மருந்தாக கொடுப்பதையும், அதில் மருத்துவ சோதனைகள் செய்வதையும் நிறுத்த வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் முயன்று வந்தது. இந்த மருந்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த இரண்டு மாதம் முன் பரிந்துரை செய்தார்.
ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் அதிக பின் விளைவுகளை கொண்ட மருந்து ஆகும். இந்தியாவுடன் சண்டை போட்டு அவரை இந்த மருந்தை வாங்கினார்.

டிரம்ப் மருந்து
அமெரிக்க அதிபர் டிரம்ப் மலேரியாவை தடுக்க உதவும் இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கொரோனா தாக்குதலுக்கு தடுப்பாக தான் உட்கொண்டு வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இது பெரிய சர்ச்சை ஆனது. ஆனால் இந்த மருந்து அமெரிக்காவில் பெரிய பலன் அளிக்கவில்லை. இந்த மருந்தை உட்கொண்ட கொரோனா நோயாளிகள் பலியானதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இதை உட்கொள்வதை டிரம்ப் நிறுத்தி உள்ளார்.

அதிரடி முடிவு
இந்த நிலையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சோதனையை நிறுத்த வைக்க, அதன் பயன்பாட்டை நிறுத்தி வைக்க உலக சுகாதார மையம் முடிவு செய்துள்ளது. அதன்படி இதுவரை ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை வைத்து நிறைய சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

மொத்தமாக நிறுத்த முடிவு
இந்த முடிவுகளுக்கான புள்ளி விவரங்களை உலக சுகாதார மையத்தின் டேட்டா பாதுகாப்பு சோதனை மையம் சோதனை செய்து வருகிறது. அதில் முடிவுகள் வந்த பின் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் குறித்து அறிவிப்போம். அதுவரை ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிப்பிற்கு மருந்தாக கொடுப்பதையும், அதில் மருத்துவ சோதனைகள் செய்வதையும் நிறுத்த வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

மலேரியா எப்படி
அதே சமயம் கொரோனா வைரஸ் தவிர மலேரியா போன்ற பாதிப்பிற்கு எப்போதும் போல ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்தலாம் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்தது. இந்தியாவில் சமீபத்தில் இதன் பயன்பாட்டை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது உலக சுகாதார மையம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications