Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி சரணடையமாட்டேன்.. அடித்து சொன்ன டொனால்ட் டிரம்ப்! சிறையிலிருந்து வெளிவந்த நிலையில் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: தேர்தல் முறைகேடு வழக்கில் அட்லாண்டா சிறையில் சரணடைந்து ஜாமீனில் வெளிவந்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இனி சரணடையப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக இருந்துள்ளார். இந்நிலையில் 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் வெற்றிபெறவில்லை. இதனையடுத்து அவர் பதவி விலக கூடாது என அவரது ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Donald Trump, who is out on bail in the election fraud case, has said that he will not surrender

இந்நிலையில் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கவும், புதிய அதிபர் பதவியேற்பு விழா நடப்பதை தடுக்கவும் ஆங்காங்கு டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்கள் வன்முறையாக வெடித்ததில் 5 பேர் வரை உயிரிழந்தனர். இது தொடர்பாக பல்வேறு மாகாணங்களில் டிரம்ப்க்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இப்படியாக ஜார்ஜியா மாகாணத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணை மாகாண நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணையின்போதே டிரம்புக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்ததால் அவர் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்பட்டது. இதனையடுத்து நேற்று வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து டிரம்ப் அட்லாண்டா சிறையில் சரணடைந்தார். அமெரிக்க வரலாறு எத்தனையோ அதிபர்களை பார்த்திருக்கிறது. ஆனால் இதுவரை அவர்கள் யார் மீதும் குற்றவியல் வழக்குகள் பதிவானது கிடையாது.

ஆனால் முதல் முறையாக டிரம்ப் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. டிரம்ப் சிறையில் ஆஜரான நிலையில் சிறைத்துறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்துக்கொண்டனர். டிரம்ப் அட்லாண்டா சிறையில் சுமார் 20 நிமிடங்கள் வரை இருந்திருக்கிறார். இந்த 20 நிமிடங்களும் அட்லாண்டா பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து ரூ.1.6 கோடியை ஜாமீன் தொகையாக கொடுத்து சிறையிலிருந்து ஜாமீன் பெற்றிருக்கிறார்.

Donald Trump, who is out on bail in the election fraud case, has said that he will not surrender

சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் அவர் நேராக அட்லாண்டாவின் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து அவரது தனி விமானம் மூலம் நியூ ஜெர்சி கோல்ஃப் கிளப்புக்கு சென்று சேர்ந்தார். முன்னதாக இந்த சம்பவம் குறித்து கருத்து கூறியுள்ள டிரம்பம், "அமெரிக்காவுக்கு இது மிகவும் சோகமான நாள்" என்று கூறியுள்ளார். அதேபோல கைது செய்யப்பட்ட பின்னர் போலீசார் எடுத்த படத்தை X சோஷியல் மீடியாவில் பகிர்ந்து, "தேர்தல் குறுக்கீடு! ஒருபோதும் சரணடையாதே!" என்று கூறியுள்ளார்.

எதிர்வரும் 2024ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ள டிரம்ப், தீவிரமான பிரசாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த நீதிமன்ற வழக்கு மற்றும் சிறை தண்டனை இவரது அரசியல் வாழ்க்கைக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல அவரை தேர்தலில் வெற்றி பெற கூடாது என எதிர்க்கட்சிகள் செய்யும் சதிதான் இந்த வழக்குகள் என டிரம்ப் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+