B-2 ஸ்டெல்த் பாமர் விமானங்கள்.. நடுவானில் நிரப்பப்பட்ட எரிபொருள்! ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: கடந்த 2 வாரங்களாக நேரடியாக நடந்து வந்த ஈரான் இஸ்ரேல் போரில் அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தி உள்ளது. போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் தாக்கப்பட்டு உள்ளன. போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி?

இந்த தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. நேற்று மாலையே அமெரிக்கா 3-4 B-2 stealth bombers விமானங்களை ஈரான் நோக்கி அனுப்பியது. குண்டுகளுடன் சென்ற இந்த விமானம் நடுவழியில் எரிபொருள் நிரப்பியது. அப்போதே இரவு தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதிக எடை கொண்ட குண்டுகளை ஏற்றி சென்றதால், இந்த விமானங்கள் குறைந்த எரிபொருளுடன் டேக் ஆப் செய்தது. இதனால் நடுவழியில்தான் கூடுதல் எரிபொருள் நிரப்பப்பட்டது. அப்போதே தாக்குதல் நடத்த போவது உறுதியானது. இந்த நிலையில்தான் அமெரிக்கா ஈரான் அணு உலை மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள் மீது வான்வழித் தாக்குதல்களைத் நடத்தி உள்ளது. ஈரானின் அணுசக்தியை முடக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல்கள், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை உள்கட்டமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்டு உள்ளது.

How did USA attack Iran with its B2 Stealth bombers Precision strike at nuclear sites

சர்ஜிக்கல் ஸ்டிரைக்

ஸ்டெல்த் வகை விமானங்களான B-2 stealth bombers பயன்படுத்தி.. 30,000-lb எடை கொண்ட குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. "பங்கர் பஸ்டர்" எனப்படும் குண்டுகள் ஆகும் இவை. இதன் மூலம் ஈரானின் சுரங்க அணு ஆயுத அமைப்புகள் அழிக்கப்பட்டு உள்ளன.

சர்ஜிக்கல் ஸ்டிரைக் பாணியில் ஈரான் உள்ள நுழைந்து, குறிப்பிட்ட தளங்களை மட்டும் தாக்கிவிட்டு, அமெரிக்க போர் விமானங்கள் வெளியேறிவிட்டன. ஃபோர்டோ போன்ற ஆழமாகப் சுரங்க பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ளன அணுசக்தி வசதிகள் அமெரிக்காவால் அழிக்கப்பட்டு உள்ளது.

உறுதி செய்த டிரம்ப்

ஈரான் நாட்டில் உள்ள 3 அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அதிபர் டிரம்ப் உறுதி செய்தார். இதனால் உலகப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், "ஈரானில் உள்ள மூன்று அணு sites மீது நாங்கள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடித்துவிட்டோம். ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன.

ஃபோர்டோவில் உள்ள முக்கியமான தளத்தில் முழு அளவிலான வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அனைத்து விமானங்களும் பத்திரமாக திரும்புகின்றன. இந்த சாதனையை நிகழ்த்திய அமெரிக்க வீரர்களுக்கு எனது வாழ்த்துகள். உலகில் இதை செய்யக்கூடிய ராணுவம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. அமைதிக்கு இதுவே சரியான நேரம்! இந்த விஷயத்தில் நீங்கள் காட்டிய கவனத்திற்கு நன்றி" என்று கூறியுள்ளார். டொனால்ட் டிரம்ப் அவர்களின் இந்த அறிக்கை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஈரான் பதிலடி

இதற்கு ஈரான் விரைவில் பதிலடி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானின் அணு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி கொடுக்கும் என்று ஈரான் ஏற்கனவே எச்சரித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களில் அமெரிக்காவின் ஈடுபாடு "மிகவும் ஆபத்தானது" என்று வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி முன்பு கூறியிருந்தார். இஸ்தான்புல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரான் மக்கள் குண்டுவீச்சை எதிர்கொண்டு இருக்கும்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+