Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாங்கள் நடத்தியது பதிலடி மட்டுமே! அது முடிந்துவிட்டது.. ஆனால் இஸ்ரேல் போரை தூண்டுகிறது: ஈரான்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கடந்த ஏப்ரல் 1ம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு, ஈரான் பதில் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்நிலையில், இதை காரணமாக வைத்துக்கொண்டு இஸ்ரேல் தற்போது தனது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனை உலக நாடுகள் கண்டித்து தடுத்து நிறுத்த வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 1ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில், சிரியாவின் டமாகஸ்கஸில் உள்ள ஈரானின் துணை தூதரகம் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ அதிகாரிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் என்று அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், இஸ்ரேல் இதனை ஒப்புக்கொள்ளவில்லை.

Iran warned in UN that Israel should not attack us

எனவே ஈரான் பதிலடி கொடுக்க களத்தில் இறங்கியது. இந்த தாக்குதல் குறித்த ஏற்கெனவே அமெரிக்கா எச்சரித்திருந்தது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் கூறியிருந்தது. இருப்பினும் இதனை மீறி ஈரான் ஏப்ரல் 14ம் தேதி தாக்குதலை தொடுத்திருக்கிறது.

அன்று இரவு மட்டும் சுமார் 200க்கும் அதிகமான ஏவுகணைகளும், ட்ரோனும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இதில் 99%-ஐ இஸ்ரேல் தனது ஐயன் டோம் பாதுகாப்பு அம்சத்தை கொண்டும், அமெரிக்கா போர் கப்பல், பிரிட்டன் போர் விமானத்தை கொண்டும் அழித்துவிட்டது. ஒரு சில ஏவுகணைகள் மட்டும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தளம் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இஸ்ரேல் ஜெஸ்ட் மிஸ்ஸில் தப்பியிருக்கிறது.

இதற்கு இஸ்ரேல் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் இது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. சூழல் இப்படி இருக்கையில், திடீரென தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதலை கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த தாக்குதலில் சுமார் 150 ராக்கெட்கள் வீசப்பட்டுள்ளன, 2 கமாண்டர்கள் உட்ட மூன்று ஹில்புல்லா போராளிகள் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக ஈரான் மீதும் இஸ்ரேல் இன்று அதிகாலை தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனை ஈரானின் ஐநா உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் கண்டித்திருக்கிறார். ஐநா சபையில் நேற்று பேசிய அவர், "ஈரானை குறி வைத்து எந்த தாக்குதலையும் எடுக்க கூடாது. நாங்கள் நடத்தியது பாதுகாப்பு மற்றும் எதிர் தாக்குதல்தான். கடந்த ஏப்ரல 1ம் தேதி இஸ்ரேல் செய்தது மிக மோசமான அத்துமீறல்.

ஐநாவின் சர்வதேச சட்டம் மற்றும் வியன்னா ஒப்பந்ததை இஸ்ரேல் வெளிப்படையாக மீறியிருக்கிறது. ஆனால் இதனை கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த இரண்டு நாடுகளின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக தற்போது மத்திய கிழக்கில் போர் மூண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+