எஜமானுக்கு திடீர் பக்கவாதம்.. பக்கத்து வீட்டுக்காரரிடம் உதவி கேட்ட பூபு.. சாமர்த்தியசாலி தான்!
உயிருக்கு போராடிய தனது எஜமானை வளர்ப்பு நாய் காப்பாற்றிய நெகிழ வைக்கும் சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவில் பக்கவாதம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நபரை அவரது வளர்ப்பு நாய் காப்பாற்றிய நெகிழ வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மனிதனின் உற்ற தோழன் நாய் தான் என்பது பல சம்பவங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பல வீடுகளில் மனிதர்களைப் போலவே நாயையும் ஒரு குடும்ப உறுப்பினராகத் தான் நடத்துவார்கள். நாய்களும் சளைக்காமல் அவர்களுக்கு அன்பைக் கைமாறாகத் தரும்.
தற்போதும் அப்படி ஒரு நெகிழ வைக்கும் சம்பவம் நாய்களின் பாசத்தை உறுதிபடுத்தும் வகையில் அமெரிக்காவில் நடந்துள்ளது.
கொத்துக்கொத்தாக கொய்யா பழத்துடன் காயத்ரி ஜெயராமன்.. ரசிக்கும் ரசிகர்கள்!
செல்ல நாய் பூபு
அமெரிக்க கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ரூடி ஆம்ர்ஸ்ட்ராங். இவர் தற்போது வடக்கு கரோலினாவில் உள்ள ஓரியண்டல் எனும் பகுதியில் வசித்து வருகிறார். அவருடன் அவரது செல்ல நாய் பூபுவும் வசித்து வருகிறது.
திடீர் பக்கவாதம்
இந்நிலையில் கடந்த வாரம் ரூடிக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலை தடுமாறிய அவரால் தொலைப்பேசியை பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. இதை பார்த்துக்கொண்டிருந்த பூபுவிடம், கண்களாலேயே யாரையாவது உதவிக்கு அழைக்கும்படி ரூடி சொல்லியிருக்கிறார்.
உதவி கேட்ட பூபு
அதைச் சரியாக புரிந்துகொண்ட பூபு, வெளியே ஓடிப்போய் அருகில் இருந்தவர்களை அழைத்து வந்திருக்கிறது. இதையடுத்து ரூடியின் நிலையை பார்த்த பக்கத்து வீட்டுக்காரரான கிம், அவசர உதவிக்கு அழைத்து ரூடியை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதால் ரூடி உயிர்பிழைத்துவிட்டார்.
Recommended Video
பாராட்டு
ரூடியின் உயிர் காப்பாற்றப்பட்டதற்கு முக்கிய காரணம் சரியான நேரத்தில் பூபு உதவிக்கு ஆட்களை அழைத்து வந்தது தான் என மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர். இந்த தகவல் சமூகவலைதளங்களில் கசிய, பூபுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சபாஷ் பூபு.