Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அலெக்ஸி நவல்னி மரணத்திற்கும் புதினுக்கும் தொடர்பு இல்லை.. அமெரிக்க உளவுத்துறை சொன்னதை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சமீபத்தில் சிறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் விவாதங்களை கிளப்பியது. குறிப்பாக, ரஷ்ய அதிபர் புதின் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், புதினுக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என அமெரிக்க உளவுத்துறை கூறியிருக்கிறது.

சர்வதேச அளவில் மீக நீண்ட காலமாக அதிபராக இருப்பவர் புதின். ரஷ்யாவின் அதிபராக நீண்ட காலமாக இருப்பதால் அவருக்கு எதிராக ஏராளமான அதிருப்திகள் கிளம்பியுள்ளன. இந்த அதிருப்திகளை புதினுக்கு எதிரான புகார்களாக மாற்றியதில் அலெக்ஸிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ரஷ்யாவில் புதினுக்கு எதிராக பேசுவதற்கே பலரும் பயந்த வந்த நிலையில், புதின் ஒரு சர்வாதிகாரி என்று பகிரங்கமாக அலெக்ஸி அறிவித்திருந்தார். புதினுக்கு எதிராக மக்களை அணி திரட்ட தொடங்கினார் அலெக்ஸி.

Russian opposition leader Alexei Navalny s death was not directly linked to Putin US intelligence has clarified

விளைவு இவரின் 'எதிர்கால ரஷ்யா' என்ற அரசியல் கட்சி வேகமாக வளர தொடங்கியது. 24 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் புதின் ஏராளமான ஊழலை செய்திருப்பதாகவும் குற்றம்சாடி அலெக்ஸி தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தினர். ரஷ்யாவில் சீர்திருத்தம் வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார். இவரை தொடர்ந்து கண்காணித்து வந்த ரஷ்ய உளவுத்துறை, அலெக்ஸி சம்பந்தப்பட்டிருக்கும் சில விவகாரங்களையும் கணக்கெடுக்க தொடங்கியது.

இப்படியாக அலெக்ஸி மீது மோசடி, நீதிமன்ற அவமதிப்பு, அறக்கட்டளை மூலமாக முறைகேடாக பணம் பெற்றது, தீவிரவாதத்தை தூண்டுதல் மற்றும் நிதியளித்தல், சட்டவிரோத தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்குதல், நாஜிக் கொள்கைகளுக்கு புத்துயிர் கொடுத்தல் மற்றும் ஆபத்தான செயல்களுக்கு குழந்தைகளை தூண்டுதல் ஏராளமான குற்றச்சாட்டுகள் பதியப்பட்டன. இதற்காக அலெக்ஸிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இப்படி இருக்கையில், கடந்த பிப்ரவரி மாதம் அவர் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த மரணம் குறித்து ஏராளமான பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியது. அதில் முக்கியமானது, அலெக்ஸி கொலையில் புதின் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதுதான். காரணம் கடந்த 2011ம் ஆண்டு அலெக்ஸி ரேடியோ சேனலுக்கு அளித்த பேட்டி. அந்த பேட்டியில் ரஷ்யாவை ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சி சர்வாதிகாரிகளை கொண்டிருக்கிறது என்று கூறியிருந்தார்.

இந்த புள்ளியில் நேரடியாக புதினுக்கும் அலெக்ஸிக்கும் பஞ்சாயத்து தொடங்கியது. இப்படியாக புதினுக்கு எதிரான பிரசாரம் காரணமாகவே அலெக்ஸி சிறையில் கொல்லப்பட்டிருக்கிறார் என்று பலரும் கூறினர். இந்த கொலையில் புதின் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார் என்றும், அவருடைய உளவு அமைப்பு, அதாவது சோவியத் காலத்தில் இவர் தலைமை வகித்த கேஜிபி எனும் உளவு அமைப்பை சேர்ந்த சிலர்தான் இந்த கொலையை புதினுக்காக செய்திருக்கிறார்கள் என்று பேச்சு அடிபட்டது.

இந்நிலையில், இந்த கொலைக்கும் புதினுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்று அமெரிக்காவின் உளவு அமைப்பு தெரிவித்திருக்கிறது. அதாவது அலெக்ஸியை கொலை செய்ய புதின் எந்த உத்தரவையும் வெளியிடவில்லை என்று உளவு அமைப்புகள் கூறியுள்ளன. இந்த சம்பவம் தற்செயலாக நடந்தது என்றும், இந்த நேரத்தில் ரஷ்யாவில் தேர்தல் நடந்து கொண்டிருந்ததால் பழி புதினை நோக்கிச் சென்றது என்றும் கூறியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+