அட அதிபருக்கே இப்படியா?.. டிரம்பின் ஐபோன் ஹேக் செய்யப்பட்டது?!.. சீனா வைத்த குறி!
அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தி வரும் ஐபோனில் இருந்து சீனா தகவல்களை ஹேக் செய்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தி வரும் ஐபோனில் இருந்து சீனா தகவல்களை ஹேக் செய்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.
அமெரிக்க அதிபர்களுக்கு நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. உலகிலேயே அமெரிக்க அதிபர்களுக்குத்தான் அதிக பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது ஐபோன் காரணமாக அவருக்கு பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
[ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் முதல் குற்றவாளி.. அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தகவல்]

வழக்கமாக என்ன நடக்கும்
பொதுவாக அமெரிக்க அதிபர்கள் யாரும் ஐபோன் பயன்படுத்தியது இல்லை. தனிப்பட்ட பணிகளுக்கு ஐபோன் பயன்படுத்தினாலும், அலுவலக பணிகளுக்கு சேட்டிலைட் போன்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். இது பென்டகனில் உள்ள டெக்கிகள் உருவாக்கி தந்த அதிநவீன சேட்டிலைட் போன்கள் ஆகும்.

என்ன குற்றச்சாட்டு
இந்த நிலையில் தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த போன்களை எப்போதாவதுதான் பயன்படுத்துகிறார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதாவது அலுவலக பயன்பாட்டிற்கும் அவர் தனது சொந்த ஐபோனை மட்டுமே பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதை குறித்து அமெரிக்க பத்திரிக்கைகள் பக்கம், பக்கமாக கட்டுரை எழுதியுள்ளது.

திருடி உள்ளதா?
மேலும், சீனா அமெரிக்க அதிபரின் அலுவலக உரையாடல்களை திருடி இருப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் ஐபோனில் இருக்கும் சில பாகங்கள் சீனாவில் தயாரானது, அதை வைத்து அதில் பேசப்படும் விஷயங்களை சீனா ஹேக் செய்து திருடுகிறது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடவடிக்கை என்ன
இந்த நிலையில் தனது அலுவலகத்தில் இருக்கும் அனைவரையும் அரசு அளித்த சேட்டிலைட் போன்களை பயன்படுத்தும்படி டிரம்ப் அறிவுறுத்தி இருக்கிறார். அதே சமயம் இந்த ஹேக்கிங் குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார். அப்படி தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications