அட அதிபருக்கே இப்படியா?.. டிரம்பின் ஐபோன் ஹேக் செய்யப்பட்டது?!.. சீனா வைத்த குறி!
அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தி வரும் ஐபோனில் இருந்து சீனா தகவல்களை ஹேக் செய்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தி வரும் ஐபோனில் இருந்து சீனா தகவல்களை ஹேக் செய்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.
அமெரிக்க அதிபர்களுக்கு நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. உலகிலேயே அமெரிக்க அதிபர்களுக்குத்தான் அதிக பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது ஐபோன் காரணமாக அவருக்கு பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
[ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் முதல் குற்றவாளி.. அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தகவல்]

வழக்கமாக என்ன நடக்கும்
பொதுவாக அமெரிக்க அதிபர்கள் யாரும் ஐபோன் பயன்படுத்தியது இல்லை. தனிப்பட்ட பணிகளுக்கு ஐபோன் பயன்படுத்தினாலும், அலுவலக பணிகளுக்கு சேட்டிலைட் போன்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். இது பென்டகனில் உள்ள டெக்கிகள் உருவாக்கி தந்த அதிநவீன சேட்டிலைட் போன்கள் ஆகும்.

என்ன குற்றச்சாட்டு
இந்த நிலையில் தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த போன்களை எப்போதாவதுதான் பயன்படுத்துகிறார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதாவது அலுவலக பயன்பாட்டிற்கும் அவர் தனது சொந்த ஐபோனை மட்டுமே பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதை குறித்து அமெரிக்க பத்திரிக்கைகள் பக்கம், பக்கமாக கட்டுரை எழுதியுள்ளது.

திருடி உள்ளதா?
மேலும், சீனா அமெரிக்க அதிபரின் அலுவலக உரையாடல்களை திருடி இருப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் ஐபோனில் இருக்கும் சில பாகங்கள் சீனாவில் தயாரானது, அதை வைத்து அதில் பேசப்படும் விஷயங்களை சீனா ஹேக் செய்து திருடுகிறது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடவடிக்கை என்ன
இந்த நிலையில் தனது அலுவலகத்தில் இருக்கும் அனைவரையும் அரசு அளித்த சேட்டிலைட் போன்களை பயன்படுத்தும்படி டிரம்ப் அறிவுறுத்தி இருக்கிறார். அதே சமயம் இந்த ஹேக்கிங் குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார். அப்படி தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications