யாதும் ஊரே யாவரும் கேளீர்.. ஐ.நா.சபையில் உலகத்துக்கே அருமையான கருத்தை தமிழில் பேசிய மோடி
Recommended Video
நியூயார்க்: மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகின் பழமையான மொழியான தமிழில் கனியன் பூங்குன்றனார் எழுதியிருப்பதாக பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபையில் பேசினார்.
பிரதமர் மோடி இன்று ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் "இந்தியாவில் மிகப்பெரிய அளவில் சுகாதாரத்திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தில் 5 ஆண்டுகளில் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டம் போல் உலகம் முழுவதும் தூய்மை திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்றார்.

சுகாதார திட்டம்
இதேபோல் இந்தியாவில் 37 கோடி ஏழைகளுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டது, மற்றும் 50 கோடி மக்களுக்கு சுகாதார திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.

ஊழல் இல்லை
அப்படியே பயோமெட்ரிக் அடையாள திட்டமான ஆதார் திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படுவது குறித்தும் அதன் மூலம் ஊழல் இல்லாமல் மக்களுக்கு திட்டங்கள் சேர்க்கப்படுவதையும் விவரித்தார்.

நீர் பாதுகாப்பு
மேலும் பிளாஸ்டிக் தடை குறித்தும் புதிய வீடுகள் கட்டும் திட்டம் குறித்தும் விரிவாக பேசினார். நீர் பாதுகாப்பை இந்தியா வலியுறுத்தி வருவதாகவும், சாலைகள் அமைக்கும் திட்டம் குறித்தும் பேசினார்.

யாதும் ஊரே யாவரும் கேளீர்
குறிப்பாக மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகின் பழமையான மொழியான தமிழில் கனியன் பூங்குன்றனார் எழுதியிருப்பதாக பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபையில் பேசினார். இதன் அர்த்தத்தையும் தெளிவாக விளக்கி சொன்ன மோடி, நாம் அனைவருக்கும் எல்லா இடங்களும் எல்லாருக்கும் சொந்தம், எல்லைகளுக்கு அப்பாற்பட்ட இந்த உணர்வு இந்தியாவுக்கு தனித்துவமானது என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications