யாதும் ஊரே யாவரும் கேளீர்.. ஐ.நா.சபையில் உலகத்துக்கே அருமையான கருத்தை தமிழில் பேசிய மோடி
Recommended Video
நியூயார்க்: மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகின் பழமையான மொழியான தமிழில் கனியன் பூங்குன்றனார் எழுதியிருப்பதாக பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபையில் பேசினார்.
பிரதமர் மோடி இன்று ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் "இந்தியாவில் மிகப்பெரிய அளவில் சுகாதாரத்திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தில் 5 ஆண்டுகளில் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டம் போல் உலகம் முழுவதும் தூய்மை திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்றார்.

சுகாதார திட்டம்
இதேபோல் இந்தியாவில் 37 கோடி ஏழைகளுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டது, மற்றும் 50 கோடி மக்களுக்கு சுகாதார திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.

ஊழல் இல்லை
அப்படியே பயோமெட்ரிக் அடையாள திட்டமான ஆதார் திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படுவது குறித்தும் அதன் மூலம் ஊழல் இல்லாமல் மக்களுக்கு திட்டங்கள் சேர்க்கப்படுவதையும் விவரித்தார்.

நீர் பாதுகாப்பு
மேலும் பிளாஸ்டிக் தடை குறித்தும் புதிய வீடுகள் கட்டும் திட்டம் குறித்தும் விரிவாக பேசினார். நீர் பாதுகாப்பை இந்தியா வலியுறுத்தி வருவதாகவும், சாலைகள் அமைக்கும் திட்டம் குறித்தும் பேசினார்.

யாதும் ஊரே யாவரும் கேளீர்
குறிப்பாக மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகின் பழமையான மொழியான தமிழில் கனியன் பூங்குன்றனார் எழுதியிருப்பதாக பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபையில் பேசினார். இதன் அர்த்தத்தையும் தெளிவாக விளக்கி சொன்ன மோடி, நாம் அனைவருக்கும் எல்லா இடங்களும் எல்லாருக்கும் சொந்தம், எல்லைகளுக்கு அப்பாற்பட்ட இந்த உணர்வு இந்தியாவுக்கு தனித்துவமானது என்றார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications