குர்ஆன் மீது உறுதிமொழி.. ரயில் சுரங்கத்தில் நின்று.. நியூயார்க் மேயராக பதவியேற்றார் மம்தானி
நியூயார்க்: நியூயார் மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி எனும் இஸ்லாமியர் வெற்றி பெற்றிருக்கிறார். தன்னை இடதுசாரியாக அறிவித்துக்கொண்டிருக்கும் இவர். டிரம்பின் கொள்கைகளுக்கு நேரெதிரானவராக இருக்கிறார். இந்நிலையில் இன்று ரயில் சுரங்கத்தில் நின்று மேயராக பதவியேற்றுக்கொண்டிருக்கிறார்.
ஜனநாயகக் கட்சியின் மம்தாணி, நியூயார்க் நகர மேயராக இன்று பதவியேற்றுள்ளார். மான்ஹாட்டனில் பயன்பாட்டில் இல்லா ரயில்வே சுரங்கப்பாதையில் மேயராக பதவியேற்றுக்கொண்டார். குர்ஆன் மீது உறுதிமொழி ஏற்று அவர் பதவியேற்றிருக்கிறார். நியூயார்க் நகர வரலாற்றில் ஒரு இஸ்லாமியர் மேயராக பதவியேற்பதும், குர்ஆன் மீது உறுதிமொழியேற்று ஒருவர் பதவியேற்பதும் இதுவே முதல் முறையாகும்.

நியூயார்க்கின் முதல் தெற்காசிய மற்றும் ஆப்பிரிக்காவில் பிறந்த முதல் மேயர் என்ற பெருமையை இவர் பெற்றிருக்கிறார். தனது 34 வயதில் இந்த பதவியை பொறுப்பேற்று இருக்கிறார். இவர் கடந்த 1991 ஆம் ஆண்டு உகாண்டாவில் பிறந்தார். இவரது தாய் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் மீரா நாயர் ஆவார். தந்தை ஒரு அறிஞர். இவர் தனது 7வது வயதில் நியூயாருக்கு வந்தார். கடந்த 2018 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். 2020இல் குவின்ஸ் பகுதியில் இருந்து மாநில சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நியூயார்க் மேயர் தேர்தலில் இவர் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியான பின்னர், பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இவரது வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் கவனம் பெற்றன.
இலவச குழந்தைகள் பராமரிப்பு மற்றும் இலவச பேருந்து வசதி கொடுக்கப்படும் என்றும், சுமார் 10 லட்சம் வீடுகளுக்கு வாடகை உயர்வு இருக்காது என்றும் அறிவித்திருந்தார். அதேபோல அரசு நடத்தும் மளிகை கடைகளை திறப்பேன் என்றும் வாக்குறுதி கொடுத்திருந்தார்.
என்னதான் இவர் தேர்தலில் வெற்றி பெற்று மேயராக தேர்வாகி இருந்தாலும், அதிபர் டிரம்ப் இவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார். நியூயார்க் நகரத்திற்கான நிதி உதவியை குறைப்பேன் என்றும் டிரம்ப் பேசியிருந்தது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications