'நான் இருக்கேன் வாம்மா'.. ஆற்றில் மேலே ஏற முடியாமல் தவித்த தாய் யானை.. குட்டியானையின் கியூட் செயல்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றிய, குட்டி யானை உட்பட 3 காட்டு யானைகளை, ரன்னிமேடு ரயில் நிலையம் வழியாக விரட்ட வனத்துறையினர் முயன்றனர்.
அப்போது ஆற்றை கடந்து 2 யானைகள் மட்டும் மேலே சென்ற நிலையில், தாய் யானை மேலே செல்லவில்லை. பின்பு குட்டி யானை கீழே இறங்கி, தாய் யானையை அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்டம் மலைகளின் அரசி என்று கூறலாம். வனவிலங்குகளின் சொர்க்க பூமியான நீலகிரி மாவட்டம் யானை, புலி, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகளின் வசிப்பிடமாக உள்ளது. குறிப்பாக யானைகளின் வாழ்விடமே நீலகிரி மாவட்டம் தான்.
அங்கு ஆங்கிலேயர் காலத்திலேயே ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டு ஏராளமான தேயிலை பயிர்கள் பயிரிடப்பட்டதால் பசுமை பாலைவனமாக உள்ளது. இங்குள்ள யானைகள் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைக்காக அடிக்கடி இடம் மாறக்கூடியவை. அப்படிப்பட்ட சூழலில் பசுமை பாலைவனமாகி உள்ள நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் யானை மனித மோதல் அதிகமாகவே உள்ளது.
யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழப்பது , குன்னூர், முதுமலை, கூடலூர், கோத்தகிரி பகுதியில் அதிக அளவு நடக்கிறது. இந்நிலையில் ம் குன்னூர் அருகே சுற்றி திரிந்த, குட்டி யானை உட்பட 3 காட்டு யானைகளை, ரன்னிமேடு ரயில் நிலையம் வழியாக விரட்ட வனத்துறையினர் முயன்றனர்.
அப்போது ஆற்றை கடந்து 2 யானைகள் மட்டும் மேலே சென்ற நிலையில், தாய் யானை மேலே செல்லவில்லை. பின்பு குட்டி யானை கீழே இறங்கி, நான் இருக்கிறேன் வாமா என்று கூப்பிடாத குறையாக தாய் யானையை அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications