Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடநாடு வழக்கில் சிக்கிய முக்கிய ஆதாரம்.. கிரீன்வேஸ் சாலையில் பதிவான அந்த 4 எண்கள்! சிபிசிஐடி தகவல்

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சென்னை கிரீன்வேஸ் சாலை செல்போன் டவர் வழியாக பேசப்பட்ட 4 செல்போன் எண்களை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக நீலகிரி நீதிமன்றத்தில் சிபிசிஐடி புதிய தகவலை தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இதை சசிகலா பராமரித்து வந்தார். சென்னையில் கோடை காலங்களில் நீலகிரியில் உள்ள கொடநாடுக்கு சென்று ஜெயலலிதா ஓய்வெடுப்பது வழக்கம்.

Kodanad estate gets 4 phone calls from Greenway Road Telephone exchange, cbcid says

எனவே இந்த கொடநாட்டை ஒரு குட்டி தலைமைச் செயலகம் என அழைப்பார்கள். இந்த நிலையில் ஜெயலலிதா இறந்த பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு கொடநாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவத்தை சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜும் அவருடைய கூட்டாளிகளும் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் சாலை விபத்தில் கனகராஜ் இறந்துவிட்டார். இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட கேரளத்தை சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர். கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்டத்தில் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. முன்பு நடந்த விசாரணையின் போது சிபிசிஐடி போலீஸார் 4 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சிபிசிஐடி போலீஸார் இன்ற ஊட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

கடந்த 13 மாதங்களாக கொடநாடு கொள்ளை கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு இன்று ஊட்டி நீதிமன்றத்தில் வந்த போது நீதிபதி அப்துல் காதர் செல்போன் டவரில் இருந்து எஸ்டேட்டுக்கு வந்த போன் எண்களை விசாரித்து வருகிறோம் என்கிறீர்கள். அந்த எண்களை யாருடையது, அங்கு எங்கே அனுப்பப்பட்டுள்ளது., அதன் ஆய்வு முடிவுகள் எப்போது கிடைக்கும் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது சிபிசிஐடி கூறுகையில் இந்த செல்போன் எண் தொடர்பான விவரங்களை குஜராத்தில் உள்ள ஆய்கத்திற்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர். இந்த செல்போன் எண்கள் பற்றிய தகவல்களை ஜூலை மாதம் குஜராத் ஆய்வு மையத்திற்கு அனுப்பினோம். இதன் முடிவுகள் வந்ததும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கிறோம் என்றும் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு கிரீன்வேஸ் சாலைக்குள்பட்ட செல்போன் டவரில் இருந்து 4 எண்கள் கொடநாடு எஸ்டேட்டுக்கு வந்ததாகவும் அதுகுறித்து ஆய்வுக்கு அனுப்பியதாகவும் தெரிவித்தனர். இந்த ஆய்வு மேற்கொள்ள ஏன் இத்தனை தாமதமானது. இந்த ஆய்வை விரைவாக முடிக்கக் கோரி குஜராத் ஆய்வகத்திற்கு இந்த நீதிமன்றம் ஏன் கடிதம் எழுதக் கூடாது . அதை வலியுறுத்தி நான் கடிதம் எழுதலாமா என நீதிபதி கேட்டார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் அரசியல்வாதிகள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+