அதிக மழை, கடும் வறட்சி.. ஊட்டிக்கு எது வேண்டுமானாலும் ஆகலாம்.. எச்சரிக்கும் நிபுணர்கள்
நீலகிரி: ஊட்டியில் கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 0.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெப்பநிலை மாற்றத்தால் அதிக அளவு மழை அல்லது கடும் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஊட்டி அருகேயுள்ள தீட்டுக்கல் பகுதியில் இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது.

இந்த ஆய்வு மையத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானி ஒருவர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் நீலகிரியில் ஏற்பட்டுள்ள கால மாற்றத்தை ஆய்வு செய்த போது, சராசரி அதிகபட்ச வெப்பநிலை 0.6 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது தெரிய வந்ததுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் கடந்த 1954-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது என கூறினார். இந்த மையத்தில் கடந்த 1960-ம் ஆண்டு முதல், ஊட்டியின் வெப்பநிலை குறித்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
1960 முதல் 1990 வரை, பின்னர் 1991 முதல் 2018 வரை என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, வெப்பநிலை மாற்றம் குறித்து தீவிரமாக ஆய்வு நடத்தினோம்.
இதில் 1960 - 1990 வரையிலான காலக்கட்டத்தில் பதிவான வெப்பநிலையை விட, கடந்த 28 ஆண்டுகளில் அதாவது 1991 - 2018 வரையிலான காலகட்டத்தில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 0.6 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்பட்டுள்ளது. மேலும் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 0.33 டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளது.
கடந்த 1960 - 1990 வரையிலான ஆண்டுகளில் 20 டிகிரி செல்சியஸிற்கும் மேலான வெப்பநிலை இரு ஆண்டுகள் நிலவியுள்ளது. ஆனால் 1991 - 2018 வரையிலான ஆண்டுகளில், சுமார் 15 ஆண்டுகள் 20 டிகிரி செல்சியஸிற்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ள அதிர்ச்சி தகவலை தெரிவித்தார் அந்த நிபுணர்.
மேலும் பேசிய அந்த விஞ்ஞானி ஆய்வு முடிவுகளின் மூலம் கடந்த 1990-ம் ஆண்டிற்கு பிறகு ஊட்டியின் வெப்பநிலையானது, தொடர்ந்து அதிகரித்தபடியே தான் இருந்து வருகிறது என்பது தெரிய வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதே நிலை இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடிக்குமானால், மிக அதிகமான மழை அல்லது அதிகமான வறட்சி என இவற்றில் எதையாவது ஒன்றை ஊட்டி சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications