ஊட்டியில் இளைஞரை கொன்று தின்ற புலி.. விறகு சேகரித்த போது நிகழ்ந்த விபரீதம்.. என்ன நடந்தது?
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே கொள்ளக்கோடு மந்து வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற தோடர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புலி தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரை தாக்கி கொன்ற புலி, அவரின் பாதி உடலை தின்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், புலி இருப்பதை அறியாமல் சென்ற போது, இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே கொள்ளக்கோடு மந்து வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் தோடர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை கொள்ளக்கோடு மந்து வனப்பகுதியில் விறகு சேகரிப்பதற்காக தோடர் பழங்குடியினத்தைச் சேர்ந்த கேந்தர் குட்டன் என்பவர் சென்றுள்ளார். அவர் இரவு நேரத்தை எட்டிய போதும், மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் அச்சமடைந்த உறவினர்கள், உடனடியாக கேந்தர் குட்டனை அருகில் உள்ள வனப்பகுதியில் தேடி இருக்கின்றனர். அப்போது கேந்தர் குட்டனின் பாதி உடல் மட்டும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தோடர் பழங்குடியின மக்கள், உடனடியாக வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்போது இளைஞர் கேந்தர் குட்டனை புலி தாக்கியது கொன்றிருப்பது தெரிய வந்தது. இளைஞர் கேந்தர் குட்டனை கொன்ற புலி, அவரின் உடலை பாதி தின்றுவிட்டு சென்றிருக்கிறது. பாதி உடல் மட்டுமே கிடைத்திருப்பதால், மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், புலி இருப்பதை அறியாமல் சென்ற போது, இளைஞருக்கு இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. மேலும் புலி தாக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சில நாட்களுக்கு முன்பாக உதகை அருகே பெண் ஒருவர் புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications