கனமழை எதிரொலி .. உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கனமழை எதிரொலியாக உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் இரு நாட்களுக்கு முன்பு் பெய்யத்தொடங்கிய மழை, பின்னர் பலத்த மழையாக மாறியது. இரவு முழுவதும் நீடித்த கனமழை, நேற்று முன்தினம் காலை வரை விடிய விடிய கொட்டியது. நீலகிரி மாவட்டத்தின் அப்பர்பவானியில் 308 மி.மீட்டரும், அவலாஞ்சியில் 220 மி.மீட்டரும் மழை பெய்தது. கூடலூரில் ஒரே நாளில் 201 மி.மீட்டர் (20 செ.மீ) மழை பெய்தது.

கூடலூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பாண்டியாறு, மாயார் உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மழை காரணமாக கூடலூர் புரமணவயல் ஆதிவாசி கிராமம் வழியாக செல்லும் ஆற்றுவாய்க்கால் வாய்க்கால் கரை உடைந்து ஆதிவாசி கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆதிவாசி மக்கள் தங்களது குடும்பத்தினருடன் பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர். ஆனால் ஆற்றின் மறுபக்கம் வசிக்கும் ஆதிவாசி மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கத்துரை தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து கயிறு கட்டி ஆற்றில் மறுபக்கத்துக்கு சென்று வெள்ளத்தில் சிக்கிய ஆதிவாசி குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 25 பேரை பாதுகாப்பாக உயிருடன் மீட்டனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த 103 ஆதிவாசி மக்கள் அத்திப்பாளி அரசு பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டார்கள்.
இது போல் கூடலூர் புத்தூர்வயல் அருகே உள்ள தேன்வயல் ஆதிவாசி கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது. உடனே ஆதிவாசி மக்கள் வெளியேறி புத்தூர்வயல் அரசு பள்ளிக்கூடத்தில் தங்கினர். அந்த முகாமில் மொத்தம் 175 பேர் தங்க வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே கூடலூரில் இருந்து மைசூரூ, ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த தீயணைப்பு படையினர் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் விரைந்து வந்து மின்வாள்கள் கொண்டு மரங்களை அறுத்து அகற்றினர். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது. எனினும் நேற்று பல இடங்களில் மழை பெய்தது. கூடலூர், பந்தலூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தொலைதொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை, பலத்த காற்று வீசுவதால் உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.நேற்று இரவு 7 மணி முதல் இன்று காலை 6 மணி வரை வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications