நீலகிரியில் அதிகாலையில் அரிதான சம்பவம்.. மசினகுடி – தெப்பகாடு ரோட்டில் யானை இருந்த கோலம்
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா, வனவிலங்கு காட்சிகளுக்குப் பெயர் பெற்ற மசினகுடி - தெப்பகாடு சாலையில், நடு இரவில் அரிதாகவே நிகழும் சம்பவம் ஒன்று நடந்தது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று சாலையின் நடுவே விழுந்து உயிரிழந்துள்ளது. வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக பல மணிநேரம் போக்குவரத்து முடங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி - தெப்பகாடு சாலையில் அதிகாலை நேரத்தில் மசினகுடியிலிருந்து தெப்பகாடு நோக்கிச் செல்லும் சாலையில் சாலையை கடக்கும் போது பெரிய யானை ஒன்று தடுமாறி விழுந்தது. சில நிமிடங்களில் அதற்கு உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.

அப்பகுதி வழியாக இரவு 10 மணிக்கு மேல் வாகன போக்குவரத்து தடைஉள்ளதால் இந்த சம்பவம் அதிகாலை நேரத்தில் வனத்துறையின் கவனத்திற்கு வந்தது. அதிகாலை நேரத்தில் சென்ற வாகன ஓட்டிகள் முதலில் அதிர்ச்சியடைந்தனர். யானை வேறு காரணத்தால் உயிரிழந்ததா என்ற சந்தேகம் எழுந்தது. உடனடியாக தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
யானையின் உடலை பரிசோதித்த வனத்துறை மருத்துவர்கள், "வயது முதிர்வு காரணமாக இயல்பான மரணம் ஏற்பட்டிருக்கலாம்" என தெரிவித்தனர். எனினும் முழுமையான காரணம் தெரிய பிணவாய்வு நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.
போக்குவரத்து முடக்கம் - சுற்றுலா பயணிகள் அவதி
யானை சாலையின் நடுவே சாய்ந்து கிடந்ததால், சுமார் 4 மணி நேரத்திற்கு வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மசினகுடி, தெப்பகாடு பகுதிகளை இணைக்கும் இந்த சாலையில், ஒரே பாதையில் இரு திசை வாகனங்களும் அடர்த்தியாக நிற்கும் நிலை ஏற்பட்டது.
• சுமார் 300க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள், பேருந்துகள், சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் சிக்கிக் கொண்டன. வனத்துறை மற்றும் காவல்துறை இணைந்து யானையை சாலையிலிருந்து அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். யானையின் உடல் வனப்பகுதிக்கு கொண்ட செல்லப்பட்டு அங்கு புதைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்றன.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications