ரயிலில் தம் அடித்தவரை தட்டிக் கேட்ட கர்ப்பிணி பெண்.. கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட பரிதாபம்!
பீகாரில், ரயிலில் சிகரெட் பிடித்தவரை தட்டிக்கேட்ட கர்ப்பிணி பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாட்னா: பீகாரில், ரயிலில் சிகரெட் பிடித்தவரை தட்டிக்கேட்ட கர்ப்பிணி பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப்பில் இருந்து பீகார் நோக்கி சென்று ஜாலியன் வாலாபாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த ரயிலில் 45 வயது நிரம்பிய கர்ப்பிணி பெண்ணான சினாத் தேவி வந்துள்ளார்.
பொது வகுப்பில் அவருடன் அவரின் குடும்ப உறுப்பினர்களும் வந்துள்ளனர். அதே வகுப்பில் வந்த சோனு யாதவ் என்ற நபருக்கும் அவருக்கும்தான் சண்டை வந்துள்ளது.

இருவருக்கும் சண்டை
சோனு யாதவ் ரயிலில் அமர்ந்து கொண்டு சிகரெட் பிடித்துள்ளார். இதனால், சினாத் தேவி சிகரெட் பிடிக்காதீர்கள், நான் கர்ப்பிணி பெண் என்று கூறியுள்ளார். அதை கேட்காத யாதவ் அந்த பெண்ணுடன் சண்டையிட்டு இருக்கிறார். அந்த பெண்ணை மோசமான வார்த்தைகளில் திட்டி இருக்கிறார்.

கழுத்தை நெரித்தார்
இந்த நிலையில் சண்டை இருவருக்கும் இடையில் பெரிதாகி உள்ளது. இதையடுத்து அந்த பெண்ணின் கழுத்தை அந்த நபர் நெரித்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை தடுக்க முயன்று இருக்கிறார்கள். அவர்களை தள்ளிவிட்டுவிட்டு அந்த பெண்ணின் கழுத்தை இவர் நெரித்துள்ளார்.

மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்
இதையடுத்து அந்த பெண் மயங்கி விழுந்தார். அதற்கு அடுத்த ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. அந்த பெண் வேகவேகமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்த பெண் மரணம் அடைந்துவிட்டார்.

கைது செய்யப்பட்டார்
அந்த பெண் 7 மாத கர்ப்பிணி ஆவார். அவரின் குழந்தையும் மரணம் அடைந்துவிட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கொலையை செய்த சோனு யாதவ் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications