பீகாரில் வரலாற்றுச் சாதனை.. மீண்டும் NDA கூட்டணி ஆட்சி? நாளை வாக்கு எண்ணிக்கை! கணிப்புகள் சொல்வதென்ன
பாட்னா: பீகார் மாநிலத்தில் நடைபெற்ற இரண்டு கட்ட சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் வரலாற்று சாதனையாக 67 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதன்மூலம் பீகாரில் ஆட்சி அமைப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பீகார் நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணியே ஆட்சியமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறுகின்றனர்.
முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்து வரும் பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் நவம்பர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 65.09 சதவீதம் வாக்குகள் பதிவாகி, பீகார் வரலாற்றில் புதிய சாதனை படைத்தது.

அதைத் தொடர்ந்து மீதமுள்ள 122 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று (நவம்பர் 10) நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த வாக்குப்பதிவில், மக்கள் பெருமளவில் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
பீகார் தேர்தல்
பெண்கள் மற்றும் இளைஞர்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 20 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் சுமார் 3.70 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 45,399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 1,302 வேட்பாளர்கள் இதில் போட்டியிட்டனர். அதில் 136 பெண்களும், 8 அமைச்சர்களும் களத்தில் இருந்தனர். வாக்குப்பதிவு பணிகளில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். தேர்தல் அமைதியாகவே நடந்த நிலையில், சில இடங்களில் மட்டும் சிறிய அளவில் மோதல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
பீகார் வாக்குப்பதிவு
நவாடா மாவட்டத்தில் அரசியல் ஆதரவாளர்கள் இடையே மோதல், சீதாமர்ஹியில் தேர்தல் விதிமுறை மீறல், அவுரங்காபாத் மற்றும் அராரியாவில் சிறு சச்சரவுகள் ஏற்பட்டன. இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் இறுதியில் 68.74 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் இரண்டு கட்டங்களிலும் சேர்த்து பீகார் மாநிலத்தில் மொத்தம் 67 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகள்
இந்நிலையில், தேர்தலுக்குப் பிறகு வெளியான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என சுட்டிக்காட்டுகின்றன. மொத்தம் 243 இடங்களில் ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில், பா.ஜ கூட்டணிக்கு 140க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனங்களின் மதிப்பீடுகள் படி, பா.ஜ கூட்டணிக்கு 135 முதல் 167 இடங்கள் வரை கிடைக்கும் எனவும், இந்தியா கூட்டணிக்கு 70 முதல் 103 இடங்கள் வரை கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பாஜக வெற்றி
பா.ஜ கூட்டணியில் பா.ஜ தனியாக 69 இடங்களும், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 62 இடங்களும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், லாலுபிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம் 63 இடங்கள் வரை வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன்சுராஜ் கட்சிக்கு பெரிய தாக்கம் இல்லை என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்குகிறது. அப்போது பீகார் மாநிலத்தில் மீண்டும் பா.ஜ கூட்டணி ஆட்சி அமைக்குமா? அல்லது இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்குமா? என்பது தெரிந்துவிடும்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications