நடிகர் சுஷாந்த் வழக்கை விசாரித்த பீகார் டிஜிபி விருப்ப ஓய்வு... பீகாரில் பாஜக சார்பில் போட்டியா?
பாட்னா: பீகாரில் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த போலீஸ் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவர் அந்த மாநிலத்தின் சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை இவரது பணிக்காலம் இருக்கும்போது, திடீரென இவர் விருப்ப ஓய்வு பெற்று இருக்கிறார். இவர் பாஜக சார்பில் வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக விருப்ப ஓய்வு பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

நிதிஷ் குமார்
இவரைப் போலவே டிஜியாக இருந்த இவரது குழுவைச் சேர்ந்த சுனில் குமார் கடந்த ஜூலை 31 ஆம் தேதி விருப்ப ஓய்வு பெற்று முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். இவரும் வரும் தேர்தலில் போட்டியிடுவார் என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

நோட்டீஸ்
இவரை பணியில் இருந்து விடுவிப்பதாக உள்துறை அமைச்சகம் கடந்த செவ்வாய் கிழமை இரவு நோட்டீஸ் வெளியிட்டு இருந்தது. விருப்ப ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுக்க வேண்டும். ஆனால், அந்த நடைமுறையை பாண்டே பின்பற்றவில்லை. இந்த நடைமுறை பாண்டே விஷயத்தில் தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவமரியாதை
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக விசாரிப்பதற்கு மும்பை சென்று இருந்த பீகார் போலீசாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், இதற்காக தான் போராடப் போவதாகவும் அறிவித்து இருந்தார். மேலும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை விமர்சிப்பதற்கு ரியா சக்ரவர்த்திக்கு தகுதி இல்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

போராட்டம்
இவரது விருப்ப ஓய்வு குறித்து பாண்டே அளித்த பேட்டியில், ''விருப்ப ஓய்வு எடுப்பதற்கு அரசியலமைப்புச் சட்டப்படி அனைத்து அதிகாரங்களும் எனக்கு உள்ளது. விசாரணைக்காக பீகாரில் இருந்து போலீசார் மும்பை சென்றபோது அவர்களை அவமதித்துள்ளனர். பீகார் மக்களின் கவுரவத்திற்காக போராட இருக்கிறேன். என்னுடைய விருப்ப ஓய்வையும் சுஷாந்த் மரணத்துடன் இணைத்துப் பேசக் கூடாது.

சமரசம்
என்னுடைய 34 ஆண்டுகள் பணியில் நான் யாருடனும் சமரசம் செய்து கொண்டது இல்லை. 50 என்கவுண்டர்களை நடத்தி உள்ளேன். எந்த அரசியல் கட்சியிலும் நான் சேரவில்லை. சமூகப் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. அரசியலில் சேராமலே இதை செய்யலாம்'' என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications