Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீகாரில் அடித்து தூக்கும் மோடி-நிதிஷ்.. ஆர்ஜேடி-காங். நிலை பரிதாபம்! Dainik Bhaskar எக்ஸிட் போல்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநிலத்தில் தேர்தல் முடிந்துள்ள நிலையில், இப்போது அங்கு எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இதற்கிடையே அங்கு என்டிஏ வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் எக்ஸிட் போல் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணிக்கு மிக மோசமான தோல்வி கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அங்கு நிதிஷ் குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி, தேஜஸ்வி தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு இடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது. இதுபோக பிரசாந்த் கிஷோரின் ஜான் சுராஜ் கட்சியும் தனித்துக் களமிறங்குவதால் அங்கு மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

Bihar Election 2025 Exit Poll Results Bihar Assembly Election 2025

அங்கு மொத்தம் 243 தொகுதிகள் இருக்கும் நிலையில், ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தபட்சம் 122 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இந்த முறை என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணி இடையே இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதற்கிடையே இன்று தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகிறது. அதில் டைனிக் பாஸ்கர் எக்ஸிட் போலில் பீகாரில் என்டிஏ ஆட்சியைத் தக்க வைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்டிஏ கூட்டணி 145- 160 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு என டைனிக் பாஸ்கர் எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. 2020 தேர்தலில் என்டிஏ 125 இடங்களைப் பெற்றிருந்தது. இந்த முறை 20 முதல் 35 இடங்கள் கூடுதலாகப் பெற்று, அதன் பலம் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

கட்சி அடிப்படையில் பார்க்கும்போது நிதிஷின் ஜேடியு 2020-ல் 43 இடங்களைப் பெற்ற நிலையில், இந்த முறை 59 முதல் 68 இடங்களைப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது 16 முதல் 25 இடங்கள் அதிகமாகப் பெறும் எனத் தெரிகிறது. பாஜக கடந்த 2020ல் 74 இடங்களைப் பெற்றிருந்தது. இந்த முறை 72 முதல் 82 இடங்களைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிராக் பாஸ்வானின் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிட்டாலும், 4 முதல் 5 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என டைனிக் பாஸ்கர் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.. ஹெச்ஏஎம் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட்டு, 4-5 தொகுதிகளிலும் ஆர்எல்எம் கட்சிக்கு எங்கும் வெல்லாது என்றும் டைனிக் பாஸ்கர் எக்ஸிட் போல் முடிவுகள் கூறுகின்றன.

மறுபுறம் இந்தியா கூட்டணி 73-91 இடங்களில் மட்டுமே வெல்லும் என டைனிக் பாஸ்கர் எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. 2020 தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி 110 இடங்களைப் பெற்ற நிலையில், இந்த முறை 19 முதல் 37 இடங்கள் வரை குறைவாகப் போகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக ஆர்ஜேடி கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்படக்கூடும். 2020ல் 75 இடங்களைப் பெற்றிருந்த நிலையில், இந்த முறை 12 முதல் 24 இடங்கள் குறையலாம். காங்கிரஸ் கட்சி 59 தொகுதிகளில் போட்டியிட்டு, 12 முதல் 15 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் சூழல் இருப்பதாக டைனிக் பாஸ்கர் தெரிவிக்கிறது. காங்கிரஸ் 2020-ல் 19 இடங்களை வென்றிருந்தது.

முகேஷ் சாஹ்னியின் VIP கட்சி 13 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும், ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பில்லை என டைனிக் பாஸ்கர் கூறியுள்ளது. இடதுசாரி கட்சிகளில், CPI-ML கட்சி கடந்த முறை 12 இடங்களைப் பெற்ற நிலையில், இந்த முறை 6 முதல் 9 இடங்களை மட்டுமே பெறும். சிபிஐ 2 இடங்களிலும், சிபிஎம் ஒரு இடத்திலும் வெல்லும் என்று டைனிக் பாஸ்கர் எக்ஸிட் போல் கூறுகிறது. அதேபோல ஐஐபி ஒரு இடத்தில் வெல்ல வாய்ப்புள்ளதாக டைனிக் பாஸ்கர் கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+