பீகாரில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்.. மாலை 6 மணிவரை 53.54% வாக்குகள் பதிவு
பாட்னா: பீகாரில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் நிலையில் அதன் முதல்கட்ட ஓட்டுப் பதிவு 71 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நடைபெற்று முடிந்தது.. மாலை 6 மணி வரை மொத்தம் 53.54% வாக்குகள் பதிவாகி இருந்தன. பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழ்வில்லை.
Recommended Video
பீகாரில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் நிலையில் அதன் முதல்கட்ட ஓட்டுப் பதிவு 71 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு துவங்கின. கொரோனா காலத்தில் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது என்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் பலப்படுத்தப்பட்டன

பீகாரின் திப்ரா பகுதியில் 2 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதால் நிம்மதி அடைந்தனர். மற்றபடி பெரிய அளவில், எங்கும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறவில்லை. மதியம் 3 மணிவரை 46% வாக்குகள் பதிவாகியிருந்தன. காலை முதலே மக்கள் ஆர்வமாக ஓட்டுப் போட்டனர். தேர்வு மையங்களில் கொரோனா பரவல் தடுப்புக்கு நிறைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
பீகாரில் 243 தொகுதிகள் உள்ளன. ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி, லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய மகா கட்பந்தன் அணி, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, அசாதுதின் ஓவைசி தலைமையிலான கூட்டணி என நான்கு முனைப் போட்டி நடக்கிறது. மொத்தம் 71 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. நவம்பர் 3ம் தேதி இரண்டாம் கட்டமாக 94 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 7ம் தேதி 78 தொகுதிகளிலும் வாக்குப் பதிவுகள் நடைபெற உள்ளன. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10ம் தேதி வெளியாகும்.

என்.டி.ஏ கூட்டணியில், ஜே.டி.யு 115 இடங்களிலும், பாஜக 110, விகாஷீல் இன்சான் கட்சி 11 இடங்களிலும், ஜிதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 7 இடங்களிலும் போட்டியிடுகின்றன
தேஜஸ்வி யாதவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளது மகாகத்பந்தன். இந்த கூட்டணியில், ஆர்ஜேடி 144 இடங்களிலும், காங்கிரஸ் 70, சிபிஐ-எம்எல் 19, இ.கம்யூ கட்சி ஆறு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நான்கு இடங்களிலும் போட்டியிடுகிறது. காலை 7 மணிக்கு துவங்கியுள்ள பீகார் ஓட்டுப் பதிவு மாலை 6 மணிவரை நடைபெற்றது. நக்சல் பாதித்த பகுதிகளில் ஒரு மணி நேரம் முன்கூட்டியே வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் மாநில அமைச்சர்களில் 6 பேர் போட்டியிடுகிறார்கள். முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி களத்தில் நிற்கும் மற்றொரு விஐபியாகும். 72 தொகுதிகளுக்கு நடந்த முதற்கட்ட வாக்குபதிவு முடிந்த நிலையில் பிற்பகல் 6 மணி நிலவரம் வெளியாகி உள்ளது. பிற்பகல் 6 மணி நிலவரப்படி 53.54% வாக்குகள் பதிவாகி இருந்தன. இது 2020: 2015 தேர்தலை விட இந்த வாக்குபதிவு சதவீதம் குறைவு என்று கூறப்படுகிறது.
மாலை 6 மணி வரை, ஷெய்க்புராவில் 55.96%, பாட்னாவில் 52.51%, போஜ்பூரில் 48.29%, பக்சரில் 54.07%, கைமூரில் 56.20%, ரோஹ்தாஸில் 49.59%, அர்வாலில் 53.85%, ஜெஹனாபாத்தில் 53.93%. %, கயா 57.05%, நவாடா 52.34%, ஜமுய் -57.41%. இது தவிர, பாகல்பூரில் 54.20%, பாங்காவில் 59.57%, முங்கரில் 47.36%, லகிசாரையில் 55.44% வாக்கு பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications