பீகார் தேர்தல்: நிதிஷ்குமார் கூட்டணி ஆதிக்கம்! திணறும் தேஜஸ்வி யாதவ்! வாக்கு எண்ணிக்கையில் ட்விஸ்ட்
பாட்னா: பீகார் மாநிலத்தின் 243 தொகுதிகளுக்கும் நவ.6 மற்றும் நவ.11 என இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தபால் வாக்குகள் எண்ணிக்கையில் நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி 132 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான மகாபந்தன் கூட்டணி 66 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.

அதேபோல மின்னணு வாக்குப்பெட்டியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையில் என்டிஏ கூட்டணி 41 இடங்களிலும், மாகபந்தன் கூட்டணி 12 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. பாஜக 21 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களிலும், ராம் விலாஸ் பஸ்வானின் LJPRV கட்சி 4 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது. அதேபோல ஆர்ஜேடி 8, காங்கிரஸ் 3, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல் 1 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. 122 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியை அமைக்கலாம். கடந்த தேர்தலை காட்டிலும் இந்த முறை அதிக அளவில் மக்கள் வாக்களித்துள்ளனர். வழக்கமாக வாக்கு எண்ணிக்கை அதிகமாக இருந்தால் ஆட்சி மாற்றம் நடக்கும் என்கிற கணிப்பு இருக்கிறது. எனவே தேஜஸ்வி யாதவ் குஷியாக இருக்கிறார்.
தேஜஸ்வி யாதவை முதல்வராக முன்னிறுத்தி ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியான மகாபந்தன் கூட்டணியும், நிதிஷ்குமாரை முதல்வராக முன்னிறுத்தி பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் என்டிஏ கூட்டணியும், தனியாக பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும், அசாதுதீன் ஓவைசியின் கிராண்ட் டெமாக்ரடிக் கூட்டணியும் களத்தில் இருக்கின்றன.
கடந்த முறையை விட இந்த முறை அதிகமான வாக்காளர்கள் வாக்களித்திருக்கும் நிலையில், வெற்றி நிச்சயம் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications