பீகார்: முதல்வர் நிதிஷ்குமார் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது மாஜி முதல்வர் மாஞ்சியின் ஹெச்ஏஎம்!
பாட்னா: பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி அரசுக்கான ஆதரவை முன்னாள் முதல்வர் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா வாபஸ் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் மாஞ்சி கட்சி இணைய உள்ளது.
பீகார் மாநிலத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்தது நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம். இதனையடுத்து லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்தார் நிதிஷ்குமார். இந்த கூட்டணி அரசுக்கு முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா ஆதரவு அளிப்பதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மாஞ்சியின் மகனும் நிதிஷ்குமார் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவருமான சந்தோஷ் சுமன் திடீரென தமது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது, ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சாவை ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்க்க முயற்சிக்கிறார் நிதிஷ்குமார்; ஆகையால்தான் பதவியை ராஜினாமா செய்தேன் என்றார்.
இதனைத் தொடர்ந்து இன்று நிதிஷ்குமார் தலைமையிலான அரசுக்கான ஆதரவை ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா வாபஸ் பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது தொடர்பாக சந்தோஷ் சுமன் கூறுகையில், நாங்கள் விரைவில் டெல்லி செல்ல இருக்கிறோம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய அழைப்பு வந்துள்ளது. இது குறித்து பரிசீலனை செய்ய இருக்கிறோம். மூன்றாவது அணி குறித்தும் ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் வரும் 23-ந் தேதி நாடு தழுவிய அளவிலான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான ஒருங்கிணைந்த வியூகம் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் நிதிஷ்குமார் அரசுக்கான ஆதரவை மாஞ்சி கட்சி வாபஸ் பெற்றிருப்பது முக்கியத்துவமானதாகவும் பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications