40 சப்பாத்திகள், 10 பிளேட் உணவு.. அலறவிட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்.. பகீர் காரணம் கூறும் ஆய்வுகள்
பாட்னா: பீகாரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி ஒரு நாளைக்கு 40 சப்பாத்திகளையும் 10 பிளேட் உணவையும் உண்டு அதிகாரிகளை அதிர வைத்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணமில்லாமல் பசி பட்டினியுடன் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை உள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து பீகாருக்கு ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வருகை தந்துள்ளனர்.
மற்ற மாநிலங்களில் இருந்து வருவதால் கொரோனா அச்சம் காரணமாகவும் அந்த நோய் பீகாருக்கு பரவாமல் இருக்கவும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு அரசின் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

அதிர்ச்சி
பீகார் மாநிலம் பக்ஸாரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கியுள்ள தனிமைப்படுத்தும் மையம் உள்ளூர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு காரணம் 23 வயது தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர் அனூப் ஓஜா. இவர் தினசரி உட்கொள்ளும் உணவால் அந்த இடமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

40 சப்பாத்திகள்
கார்ஹா தண்ட் பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் அனூப். இவர் காலை உணவாக 40 சப்பாத்திகளை உண்கிறார். மதிய உணவுக்கு 10 பிளேட் சாப்பாட்டை உட்கொள்கிறார். இவ்வாறு அதிகமாக உட்கொள்வதால் கவலையடைந்த அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். அனூப் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் இந்த மையத்திற்குவந்தார்.

தனிமை
ராஜஸ்தான் மாநிலத்தில் பிழைப்பு தேடி சென்ற நிலையில் தற்போது பீகாரில் சொந்த ஊருக்கு செல்ல வந்த போது தனிமைப்படுத்தப்பட்டார். வரும் வியாழக்கிழமையுடன் அவரது தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைகிறது. அன்றைய தினம் அவர் வீடு திரும்புகிறார்.
Recommended Video

ஸ்ட்ரெஸ்
அதிக அழுத்தமிருந்தால் அட்ரினல் சுரப்பிகள் கார்டிசோல் எனும் ஹார்மோனை சுரக்கும். இந்த ஹார்மோன் பசியை தூண்டி அதிகமாக உணவு உட்கொள்ளத் தூண்டும் என்கிறார்கள் ஹார்வார்டு மருத்துவ கல்லூரி ஆய்வறிக்கை கூறுகிறது. மன அழுத்தம் இருந்தாலும் அதிக உணவு உட்கொள்வார்கள் என்கிறது ஆய்வறிக்கை.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications